Balibeedathil Ennai Parane – பலிபீடத்தில் என்னைப் பரனே
Balibeedathil Ennai Parane – பலிபீடத்தில் என்னைப் பரனே
பலிபீடத்தில் என்னைப் பரனே படைக்கிறேனே இந்த வேளை அடியேனை திருச்சித்தம் போல ஆண்டு நடத்திடுமே (2)
கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன் (2) கழுவும் உம் திரு இரத்தத்தாலே கரை நீங்க இருதயத்தை (2)
1. நீரன்றி என்னாலே பாரில் ஏதும் நான் செய்திட இயலேன் சேர்ப்பீரே வழுவாது என்னைக் காத்துமக்காய் நிறுத்தி (2) – கல்வாரியின்
2. ஆவியோடாத்மா சரீரம் அன்பரே உமக்கென்றும் ஈந்தேன் ஆலய மாக்கியே இப்போ ஆசீர்வதித்தருளும் (2) – கல்வாரியின்
3. சுயமென்னில் சாம்பலாய் மாற சுத்தாவியே அனல் மூட்டும் ஜெயம் பெற்று மாமிசம் சாக தேவா அருள் செய்குவீர் (2) – கல்வாரியின்
4. பொன்னையும் பொருளையும் விரும்பேன் மண்ணின் வாழ்வையும் நான் வெறுத்தேன் மன்னவன் இயேசுவின் சாயல் இந்நிலத்தே கண்டதால் (2) – கல்வாரியின்
Balibeedathil Ennai Parane song lyrics in English Balippeedaththil ennai paranae Padaikkiraenae indha vaelai Adiyaenai thirusiththam poala Aandu nadaththidumae
Kalvaariyin anbinaiyae Kandu viraindhoadi vandhaen Kazhuvum um thiruraththathaalae Karai neenga iridhayaththai
1. Neerandri ennaalae paaril Aedhum naan seidhida iyalaen Saerpeerae vazhuvaadhu ennai Kaaththumakkaai niruththi – Kalvaariyin
2. Aaviyoadaathmaa sareeram Anbarae umakkendrum eendhaen Aalayamaakiyae ippoa Aasirvadhiththarulum – Kalvaariyin
3. Suyamennil saambalaai maara Suththaaviyae anal moottum Jeyam petru maamisam saaga Dhaeva arul seiguveer – Kalvaariyin
4. Ponnaiyum porulaiyum virumbaen Mannin vaazhvaiyum naan veruthaen Mannavan Yaesuvin saayal Innilaththae kandadhaal – Kalvaariyin
✝️✝️ ஒரு நிமிடம் தியானம் ✝️✝️ யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும். ஆதியாகமம் 49:22 யோசேப்பின் அப்பா யாக்கோபு தன் சகோதரனாகிய ஏசாவை ஏமாற்றி ஆசீர்வாதத்தை பெற்று கொண்டார், யோசேப்பின் அம்மா ராகேல் தன் சகோதரி மேல் பொறாமை கொண்டால், யோசேப்பின் சகோதர்கள் தீங்கு செய்பவராக இருந்தார்கள், யோசேப்பு வேலை செய்த இடத்தில் பாவம் செய்தார்கள், குற்றங்கள் செய்து சிறையில் இருக்கும் ஜனங்களோடு யோசேப்பு இருந்தார், இப்படியாக அனேக மக்களோடு வாழ்ந்த யோசேப்பு கர்த்தரிடத்தில் உண்மையும், உத்தமமாய் வாழ்ந்தார், ஆண்டவர் யோசேப்பை ஆசீர்வதித்தார், இந்த உலகில் நாம் பலத்தரப்பட்ட மனிதர்களுடன் வாழ்ந்து கொண்டுருக்கிறோம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம் கொண்டவர்கள், நம்மில் அனேகர் சொல்லும் காரியம் இந்த கெட்ட பழக்கம் என் அப்பாவிடம் இருந்து எனக்கு வந்துவிட்டது, என் அம்மாவிடம் இருந்து வந்துவிட்டது, என் நண்பர்கள் கட்டாயப்படுத்தியதால் நானும் இந்த பாவத்திற்குள்ளானேன், பாவங்கள் அனைத்தும் நாம் செய்துவிட்டு மற்றவர்கள் மீது பழியை போடுவோம், யோசேப்பை போல எந்த சூழ்நிலையிலும் எந்த மனிதரோடும் வாழ்ந்தாலும் ஆண்டவருக்கு உண்மையாகவும் உத்தமமாய் வாழ்ந்து கர்த்தராகிய ஆண்டவருடைய ஆசீர்வாதத்தை பெற்றுகொள்வோம், அல்லேலூயா, ஆமென். கர்த்தருடைய ஊழியத்தில் W. மேஷாக்.
https://www.instagram.com/p/CGv7NYaHV5J/
Install our App and copy lyrics !
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
#face protect shield
#clear face shield
#protect shield
#face shield
#face protect
#facial shield
#KN95 FaceMask
#Face Mask