Keerthanaigal

எங்கள் விண்ணப்பம் – Engal Vinnappam

பல்லவி எங்கள் விண்ணப்பம் கேள் ஐயா, ஏசுநாதையா, எங்கள் விண்ணப்பம் கேள் ஐயா. அனுபல்லவி என்றன் திரு ரத்தத்தால் உகந்து நீர் கொண்ட சபை வந்துன் பதம் பணிந்து வந்தித்துச் செய்தவங்கள். – எங்கள் சரணங்கள் 1. இருள் சூழ் தொல் புவி மீது, ஏகனே,-இலங்கிடவுன் ஒரு சொல்லால் ஒளிவீசச் செய்ததையே; இருளும் அருளு நிறை எல்லா மனுடர் நெஞ்சம் அருள் ஒளிவீசி இன்று அத்தன் பதம் பணிய. – எங்கள் 2. மந்தையாடு சிதறிப் போனதை-மறுகி, […]

எங்கள் விண்ணப்பம் – Engal Vinnappam Read More »

உன்னதமானவர் சன்னிதி – Unnathamanavar sannithi

பல்லவி உன்னதமானவர் சன்னிதி மறைவில் வந்தடைக்கலம் சரண் புகுவேன். சரணங்கள் 1. சத்தியம் பரிசை கேடகமாகும் சர்வ வல்லவர் நிழலில் தங்கிடுவேன். 2. வேடன் கண்ணிக், கொள்ளைநோய், சங்காரம் விக்கினம் யாவும் விலக்கித்தற்காப்பார். 3. வாதை, பொல்லாப்பு, பயங்கரம் அகற்றி, வாழ் நாளைக் கழிக்கக் கிருபை செய்வார். 4. நீடித்த நாட்களால் திருப்தியாக்கி நித்திய ரட்சிப்பைக் கட்டளை யிடுவார். 5. பிதா, குமாரன், பரிசுத்த ஆவிக்கும் சதா காலமும் மகிமை உண்டாகும்.

உன்னதமானவர் சன்னிதி – Unnathamanavar sannithi Read More »

இயேசுநாதனே இரங்கும் – Yesu Nathanae Irangum

பல்லவி ஏசுநாதனே!-இரங்கும் என்-ஏசு நாதனே அனுபல்லவி ஆசைக்கிறிஸ் தென தன்புள்ள நேசனே, அருளே, தெருளே, பொருளே, ஆவல் ஆகினேன்-மகா பிரலாபம் மூழ்கினேன்; ஐயா, நேயா, தூயா, ரட்சியும்; ஆபத்தினால் பரிதபித்து நிற்கிறேன். – ஏசு சரணங்கள் 1. அருமை ரட்சகனே; உனை அல்லாமல் ஆதரவார்? ஐயா? ஆத்தும நாயகன் நீ என்னக்கல்லவோ? அன்புகூர், மெய்யா, தருணம், தருணம், கைவிடாதேயும்; தலைவா, வலவா, நலவா, தாமதியாதே;-கிருபை செயும், ஸ்வாமி-இப்போதே, தாதா! நாதா! நீ தா! நீ கா! தருமப்

இயேசுநாதனே இரங்கும் – Yesu Nathanae Irangum Read More »

இதோ அடியேனிருக்கிறேன் – Itho Adiyean Irukirean

பல்லவி இதோ! அடியேனிருக்கிறேன்,-என்னை அனுப்பும், ஏசுவே, இப்போதே போகிறேன். அனுபல்லவி இதோ! போகிறேன் நாதனே, இப்புவியில் நீர் எனக்கே எந்த இடம் காண்பித்தாலும் உந்தன் சித்தம் செய்திடுவேன்;- சரணங்கள் 1. மலைகள், பள்ளங்கள் தாண்டியோ,-மா கஷ்டமான வனங்கள், கடல்கள் கடந்தோ, தொலை தூரமாகச் சென்றோ, சுவிசேஷம் கூறும்படிச் சொல்லும்போது நீர் ஏசுவே, துரிதமாய்ச் சென்றிடுவேன்; – இதோ 2. வறியர் அறிவீனருக்கும்,-மா துஷ்டருக்கும், வணங்காக் கழுத்துள்ளோருக்கும், அறிவி என் நாமம் என்று அடியேனை ஏவும்போது சரியென்றிணங்கி எல்லா

இதோ அடியேனிருக்கிறேன் – Itho Adiyean Irukirean Read More »

ஏசையா பிளவுண்ட மலையே – Yeasaiya Pizhaunda malayae

ஏசையா பிளவுண்ட மலையே – Yeasaiya Pizhaunda malayae பல்லவி ஏசையா, பிளவுண்ட மலையே,மோசநாளில் உன்னில் மறைவேனே. சரணங்கள் 1. மோசமுள்ள பாவ நோய் முழுவதும் என்னில் தீர், ஐயா;தோஷம் நீக்கும் இரு மருந்தாமே-சொரிந்த உதிரம் நீருமே. – ஏசையா 2. இகத்தில் என்னென் செய்தாலும் ஏற்காதே உன் நீதிக்கு,மிகவாய் நொந்தழுதும் தீராதே-மீளாப் பாவ ரோகமே;-ஏசையா 3. பேரறம் அருந்தவம் பெருமிதமாய்ச் செய்திடினும்,நேரஸ்தரின்பாவம் நீங்குமோ?-நீங்காதே உன்னாலல்லால்; – ஏசையா 4. வெறுங் கையோடோடி வந்து, வினை நாசன்

ஏசையா பிளவுண்ட மலையே – Yeasaiya Pizhaunda malayae Read More »

ஆவியாம் ஈசனை ஆவியில் – Aaviyam Eesanai Aaviyil

பல்லவி ஆவியாம் ஈசனை ஆவியில் உண்மையாய் ஆராதிக்க வேணுமே! அனுபல்லவி ஜீவருக் கெல்லாம் அதீதமாக நின்ற சித்விலாசன் சருவகாரணன் அந்த – ஆவி சரணங்கள் 1. எங்குமு றைபவன், எவ்வுயிர்க் குமீசன், இதயக் கண்ணால்மட்டும் காணத்த கும்விகாசன், இங்குமங் குமென்ன வில்லாமல் எவருக்கும் எந்தவி டத்திலும் இறைவனா கவமர்ந்த – ஆதி 2. சத்து சித்தானந்த மான தனிமுதல், சார்ந்தடி பணிபவர்க் கழியாத மெய்ப்பொருள், ஓங்கிய அன்பினால் தொழவேண்டுமே, அந்த – ஆவி

ஆவியாம் ஈசனை ஆவியில் – Aaviyam Eesanai Aaviyil Read More »

அன்பர்க்கருள் புரிவோனை – Anbarukarul Purivonai

1. அன்பர்க்கருள் புரிவோனை, ஆதியாய் நின்ற சீமானை, துன்பமகற்றிடுங் கோனை, தூயமனமுளத்தானை, பொன் பொலியும் பெருமானை, பூரண நேசமுற்றானை, இன்பமளித்திடுந்தேனை, இலங்குந்திருமேனி கண்டேன்; கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன். 2. சத்தியவாசகப்போதன், சாற்று முரைப்பிடிவாதன், பத்திசேர் சற்பிரசாதன், பாவமகற்றும் பொற்பாதன், எத்திசையோர் தேடும் நாதன், இந்நிலம் வந்தமா நீதன், முத்தியளித்திடு வேதன், மூவாதிருமேனி கண்டேன்; கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன். 3. பாவமகற்று பகாரன், பசாசுகளுக்கபகாரன், ஜீவனளிக்கும் உதாரன், தீவினைபோக்குங் குமாரன்,

அன்பர்க்கருள் புரிவோனை – Anbarukarul Purivonai Read More »

அல்லேலூயா என்றுமே அவருடைய – Alleluajah Entrumae Avarudaya

1. அல்லேலூயா என்றுமே அவருடைய பரிசுத்த ஆலயத்தில் அவரைத்துதியுங்கள், என்றும் அவரைத்துதியுங்கள். வல்லமை விளங்கும் வானத்தைப் பார்த்து வல்லமை நிறைந்த கிரியைக்காக அல்லேலூயா அல்லேலூயா. 2. மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய் எக்காளத் தொனியோடே அவரைத் துதியுங்கள், என்றும் அவரைத்துதியுங்கள். வீணை சுரமண்டலம் தம்புரு நடனத்தோடும் யாழோடும் குழலோடும் தாளங்களுடனும் அல்லேலூயா அல்லேலூயா 3. பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் இங்கித சங்கீதத்தோடும் அவரைத்துதியுங்கள். என்றும் அவரைத் துதியுங்கள். சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத்துதியுங்கள், சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத்துதியுங்கள். அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா என்றுமே அவருடைய – Alleluajah Entrumae Avarudaya Read More »

அருட் பெரும் சோதி நீ அடியேனை -Arut perum sothi nee

பல்லவி அருட் பெரும் சோதி, நீ அடியேனை மீட்டே-உன் திருவரம் தருவாயே. அனுபல்லவி மருள் கொண்டு மாய்கிறேன், மானிலந் தன்னிலே அருள் தந்து காப்பாயே. – அருட் சரணங்கள் 1. அல்லல் வினை யகற்றும் அரிய குமாரன் நீ, தொல்லுலகை ரட்சித்த கொல்கதா வீரன் நீ, செல்வம் அளிக்கும் நல்ல தெய்வ குபேரன் நீ, புல்லன் எனக்கு வாய்த்த சொல்லரிய பொக்கிஷம் நீ. – அருட் 2. வன் நெஞ்சேனை இழுத்த தீன தயாளன் நீ, புன்

அருட் பெரும் சோதி நீ அடியேனை -Arut perum sothi nee Read More »

அதிசயங்களைச் செய்யும் – Athisayangalai seiyum Aandavar

பல்லவி அதிசயங்களைச் செய்யும் ஆண்டவரை ஆனந்தமாக ஆர்ப்பரிப்பீரே. அனுபல்லவி இரக்கம் கிருபை சத்தியம் விளங்க இஸ்ரவேலரை நினைவு கூர்ந்தார். – அதி சரணங்கள் 1. நீதியை ஜாதிகள் முன்பாக நிறுத்தி நித்திய ரட்சிப்பைப் பிரஸ்தாபப்படுத்திப் பூமியின் எல்லைகள் நின்புகழ் காணப் புரிந்தனை நின் அருள் பூரணமாக; – அதி 2. பூரிகை எக்காளம் சுரமண்டலத்தால் பூரிப்பாய்த் துதிப்பீர் ஆண்டவர் நாமம், கீத சத்தத்தாலே கீர்த்தனம்பண்ணிக் கிருபாகரனைப் போற்றிடுவீரே. – அதி 3. ஆழியும் பூமியும் அதிலுள்ள யாவும்

அதிசயங்களைச் செய்யும் – Athisayangalai seiyum Aandavar Read More »

உலகும் வானும் செய்தாளும் – Ulagum Vaanum Seithaalum

உலகும் வானும் செய்தாளும் ஒப்பில் சர்வ வல்லவராய்இலகுமருளாம் தந்தையாம் எம்பிரான்றனை நம்புகிறேன் அவரொரு பேறாமைந்தனுமாய் ஆதிமுதலெங்கர்த்தனு மாய்த்தவறிலேசு க்கிறிஸ்துவையும் சந்ததமே யான் நம்புகிறேன் பரிசுத்தாவி அருளதனால் படிமேல் கன்னிமரியிடமாய்உருவாய் நரரவதாரமதாய் உதித்தாரெனவும் நம்புகிறேன் பொந்துபிலாத்ததி பதினாளில் புகலருபாடுகளையேற்றுஉந்துஞ் சிலுவையறையுண்டு உயிர்விட்டாரென நம்புகிறேன் இறந்தே அடங்கிப் பாதாளம் இறங்கி மூன்றாம் தினமதிலெஇறந்தோரிட நின்றே உயிரொடெ ளுந்தாரெனவும் நம்புகிறேன் சந்தத மோட்சம் எளுந்தருளிச் சருவவல்ல பரனானஎந்தை தன்வலப் பாரிசமே யிருக்கிறாரென நம்புகிறேன் உயிருள்ளோரை மரித்தோரை உத்தமஞாயந் தீர்த்திடவேஜெயமாய்த் திரும்பவருவாரெனச் சிந்தையார

உலகும் வானும் செய்தாளும் – Ulagum Vaanum Seithaalum Read More »

Manuveal Thondarae Aarparithu – மானுவேல் தொண்டரே ஆர்ப்பரித்து

பல்லவி மானுவேல் தொண்டரே!-ஆர்ப்பரித்து மகிழ்ந்து பூரிப்போம். அனுபல்லவி மானிலமீது சமாதானமா மென்ற வானவர் வாழ்த் துதவறா தென நம்பும், நானிலமெங்கும் சகோதர ஐக்கியம் நண்ணும் பகலருணோதயம் ஆகுதே: நாடுவோம்,-அதைத் தேடுவோம்,-இனி நாமுமுயற்சி கையாடுவோம், பாடுவோம். – மானு சரணங்கள் 1. தீர்க்க ருரைப்படியே-உலகெங்கும் தீங்கிலாக் காலம் வரும்: தாக்கும் படைக்கலங்கல்-கிருஷிகச் சாதனமாகி விடும்: மாக்க ளெலாமொரே தந்தையின் மக்களாய், மன்னன் யேசுவுக்கு ளொன்றான தோழராய், வாக்குவாதங்கள், வழக்குகள், யுத்தங்கள் நீக்கி யிணக்கம் பொறுமை நற்குணங்கள் நிலைத்து,-அன்பு-வளர்த்துக்,-கரங் கொடுத்து,-உற

Manuveal Thondarae Aarparithu – மானுவேல் தொண்டரே ஆர்ப்பரித்து Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version