பரலோக தந்தாய் நின்னாமம் – Paraloga Thanthaai Ninnamam
1. பரலோக தந்தாய்! நின்னாமம்-அதி பரிசுத்தமுறவே, நின் ராஜ்யம் வரவே, நினது திருவுளச் சித்தமே பரமதில் போலிங்கும் துலங்கிடவே. 2. அன்றாடம் உணவளித்திடுவாய்;-யாம் அயலார் செய்பிழை பொறுப்பதுபோல், இன்றே எங்கள் பவங்களைப் பொறுத்தே நன்றருள்வாய் நரபரிபாலா! 3. சோதனையறக் கண்பார்த்திடுவாய்;-வரு தீதனைத்திலும் எமைக் காத்திடுவாய்; நீதா, ராஜ்யம் வல்லப மகிமை நினைக்கே யுரிய எக்காலமுமே!
பரலோக தந்தாய் நின்னாமம் – Paraloga Thanthaai Ninnamam Read More »