Keerthanaigal

பரலோக தந்தாய் நின்னாமம் – Paraloga Thanthaai Ninnamam

1. பரலோக தந்தாய்! நின்னாமம்-அதி பரிசுத்தமுறவே, நின் ராஜ்யம் வரவே, நினது திருவுளச் சித்தமே பரமதில் போலிங்கும் துலங்கிடவே. 2. அன்றாடம் உணவளித்திடுவாய்;-யாம் அயலார் செய்பிழை பொறுப்பதுபோல், இன்றே எங்கள் பவங்களைப் பொறுத்தே நன்றருள்வாய் நரபரிபாலா! 3. சோதனையறக் கண்பார்த்திடுவாய்;-வரு தீதனைத்திலும் எமைக் காத்திடுவாய்; நீதா, ராஜ்யம் வல்லப மகிமை நினைக்கே யுரிய எக்காலமுமே!

பரலோக தந்தாய் நின்னாமம் – Paraloga Thanthaai Ninnamam Read More »

பரம சேனை கொண்டாடினார் – Parama seanai kondadinaar

பல்லவி பரம சேனை கொண்டாடினார்; பரன் இரக்கத்தைப் பாடினார். சரணங்கள் 1. பரத்திலே இருந்து பதி பெத்தலேம் வந்து, பரன் நரரூபணிந்து பணிவானதில் சிறந்து, – பரம 2. இரவின் இருளை மாற்றி, இடையர் மனதைத் தேற்றி, கிருபைப் பரனைப் போற்றி, கிறிஸ்தின் பிறப்பைச் சாற்றி, – பரம 3. சர்ப்பப்பேயை வென்று, சகலர்க் கேய நன்று அற்புதமாக இன்று அத்தன் பிறந்தார் என்று, – பரம

பரம சேனை கொண்டாடினார் – Parama seanai kondadinaar Read More »

தோத்திரிக்கிறேன் நான் – Thotharikirean naan

பல்லவி தோத்திரிக்கிறேன் நான் தோத்திரிக்கிறேன்;-தேவ சுந்தரக் கிறிஸ்துவேந்தைத் தோத்திரிக்கிறேன். சரணங்கள் 1. க்ஷேத்திரத்தொரே யோவாவைத் தோத்திரிக்கிறேன்,-கன திவ்விய திரித்துவத்தைத் தோத்திரிக்கிறேன்; பாத்திரமாக்கிக் கொண்டோனைத் தோத்திரிக்கிறேன்;-உயர் பரமண்ட லாதிபனைத் தோத்திரிக்கிறேன்; நேத்திரக் க்ருபாநதியைத் தோத்திரிக்கிறேன்;-சதா நித்திய மகத்துவத்தைத் தோத்திரிக்கிறேன்; கோத்திரத் திஸராவேலைத் தோத்திரிக்கிறேன்;-யூதர் கொற்றவனைப் பெற்றவனைத் தோத்திரிக்கிறேன். – தோத் 2. அண்டர்களி னாயகனைத் தோத்திரிக்கிறேன்;-அதற்கு அப்புறத்தை அப்புறத்தைத் தோத்திரிக்கிறேன்; மண்டலமெலாமறியத் தோத்திரிக்கிறேன்;-முழு வானவரும் பார்த்து நிற்கத் தோத்திரிக்கிறேன்; தெண்டனிட்டுத் தெண்டனிட்டுத் தோத்திரிக்கிறேன்;- மனச் சிந்தையினால், விந்தையினால் தோத்திரிக்கிறேன்;

தோத்திரிக்கிறேன் நான் – Thotharikirean naan Read More »

தூயர் தூயர் தூயரென – Thuyar Thuyar Thuyareana

பல்லவி தூயர், தூயர், தூயரெனத் தூதர் தினம் போற்றும்பரி சுத்தரான தேவனைத் துதிப்போமே. சரணங்கள் 1. நேயமோ டெங்கள் பவம் போக்கவும், நீசரைத் தேவ புத்திரராக்கவும், நித்திய குமாரனை இத்தரைக்கீந்தாரே. – தூயர் 2. நீடிக தயை யுடன் நீசரை நித்தம் பரிபாலிக்கும் நேசரை நித்தமும் பத்தியாய்த் துத்தியம் செய்த்தகும். – தூயர் 3. அடியார் பிழை பொறுத்தன்புடன் ஆதரித்தாரே மிக இன்புடன்; அல்லும் பகலும் நாம் சொல்லுவோம் துத்தியம். – தூயர் 4. அந்தமும் ஆதியு

தூயர் தூயர் தூயரென – Thuyar Thuyar Thuyareana Read More »

சொல்லிவந்துன் பாதம் – Solli vanthun paatham

பல்லவி சொல்லிவந்துன் பாதம் புல்லினேன், பரனே, நீயும் தூரமாகாதாள்வாய், நேசனே. அனுபல்லவி எல்லியும் அல்லியும் நொந்து யான் இரங்கவே கசிந்து கல்லு மனமும் கரைந்து காதல் கூருமே உகந்து. – சொல் சரணங்கள் 1. இரும்பு நெஞ்சமும் குழையாதோ?-ஏழை கூப்பிட்டால் இறையோனே காதில் நுழையாதோ? திரும்பி என்துயர் களையாயோ?-உன் திருவடி சேர்க்க என்றனை அழையாயோ? அரும்பி விழுங் கண்ணீர் ஆறாய், அலைபுரளும் தன்மை தேறாய்; விரும்பி நீ வா என்று காறாய், மெய்யனெ நின்னருட் பேறாய். –

சொல்லிவந்துன் பாதம் – Solli vanthun paatham Read More »

சேவித்துக் கொண்டேன் – Seavithu kondean

பல்லவி சேவித்துக் கொண்டேன், ஐயா;-சீர்பாதத்தைத் தெரிசித்துக் கண்டேன், ஐயா. சரணங்கள் 1. ஆவிக்குரிய மணவாளன் ஏசுகிறிஸ்து ஜீவப்பிரான் ஒரு தேவகுமாரனை நான் – சேவி 2. சந்த க்ருபை சிறந்த சத்ய பிதாவின் ஒரு மைந்த கிறிஸ்துவே, நின் மகத்வ ப்ரசன்னத்தைச் – சேவி

சேவித்துக் கொண்டேன் – Seavithu kondean Read More »

சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும் – Salae Managar Kzeel

1. சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும், தோன்றும் ஒலிவடி வாரம்,-போக வேண்டும் அரைமைல் தூரம்,-நடு ராவினில்பதி னோரொருவரோடு ஏகினார் கெத்செ மேனே நோக்கியே, நன்றென வெட்டுப் பேரைப் பிரித்தங்கே வைத்தாரே தோட்டத்தின் ஓரம்,-மூவ ரைத்துணை கொண்டாரந் நேரம். 2. கல்லெறி தூரம் சென்று முழங்காலில் நின்று ஊக்க ஜெபம் செய்ய,-துயர் கொண்டு ரத்த வேர்வை பெய்ய,-பெரும் சத்தத்தோடு கண் ணீரும் பொங்கவே, சக்தி முற்றிலும் அற்றுப்போகவே, சாடினார் முகம் குப்புறத்தூளிலே சாற்றவும் கூடுமோ நாதன்?-வந்து தேற்றினான் அங்கொரு

சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும் – Salae Managar Kzeel Read More »

கொலைக்காவனம் போறார் – Kolaikavanam Porar

பல்லவி கொலைக்காவனம் போறார், அன்னமே-நரர் கொடிய பாவத்தால், இதோ முனன்மே. அனுபல்லவி வலமைச் சதா நித்திய, தலைமைத் தேவா திபத்திய, வஸ்தனாதி திருச்சேயன், உத்தம கிறிஸ்துநாயன், மனுடர்களுட பிணையாளி மத்யஸ்தன், எனுட் பிரிய மணவாள சிரேஷ்டன், வங்கண விங்கித லங்கிர்த நேசன், சங்கமுழங்கிய சங்கையின் ராசன் மருகிய துயரொடு குருசினில் மடியத் திருவுளமாய் நமதேசுவுங் கொடிய – கொலை சரணங்கள் 1. பொந்தியுப் பிலாத்துவின் கீழாக – நின்று புண்ணியனார் பாடுப்பட்டுச் சாக, பூரியர் ஆரியர் வீரிய

கொலைக்காவனம் போறார் – Kolaikavanam Porar Read More »

கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள் – Kartharai Pottri

பல்லவி கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள், கருத்துடன் பரமனை நித்தமே புகழ்ந்து துதியுங்கள். அனுபல்லவி சித்தியா யிகத்தை வகுத்து,-சக்தியால் மனுவைப் படைத்து முத்தியிலவனைச்சேர்க்க, இத்தரை மகவையனுப்பிய. சரணங்கள் 1. ஏகன் செய் சகல சிருஷ்டியே-நீர் எழுந்து பாடும், தேக மில்லாத தூதரே; மேகவானங்கள் சேரும்-மீதுள்ள தண்ணீர் வாரும் வேகவான் வலிமை நீரும்-விமலனைப்புகழ்ந்து பாடும். – கர்த் 2. சூரிய சந்திர சோதியே,-சோபித்து மின்னும் ஆரியவுடுக்கள் கோடியே, மாரியே பனியே காற்றே,-மகத்துவ நெருப்பே கொதிப்பே, சீரான மழையின் காலம்-சேருங் கோடைகாலம்

கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள் – Kartharai Pottri Read More »

கர்த்தரைக் கெம்பீரமாக -Kartharai kembeeramaga

பல்லவி கர்த்தரைக் கெம்பீரமாக நாம் பாடுவோம், கன்மலையைப் போற்றக் கூடிடுவோம். அனுபல்லவி கர்த்தரின் தூய சந்நிதி நாடி நித்தியனைத் துதியுடன் கொண்டாடி, சரணங்கள் 1. தேவாதி தேவன் தேவர்க்கும் ராசன் தெள்ளமுது தெளிதேன் மாதேவன், மூவாதி முதல்வன் மூவுலகாள் வோன், மூவுல கனைத்தும் படைத்த நிமலன். – கர்த் 2. ஆழங்களும் மகா உயரங்களும் அத்தன் திருக்கையில் உள்ளனவே. அகன்ற சாகரம் ஆன பெரும் பூமி ஆயின யாவும் அவர் கரத்தால் நேமி. – கர்த் 3.

கர்த்தரைக் கெம்பீரமாக -Kartharai kembeeramaga Read More »

கர்த்தர் நம் வீட்டினை – Karthar nam veettinai

1. கர்த்தர் நம் வீட்டினைக் கட்டுதலில்லையேல் கட்டும் நம் முயற்சிகள் கடிது வீணாகுமே. கர்த்தர் நம் நகரினைக் காவா திருந்திடில் காவலர் கடும்பணி கண்விழித்தும் வீணே. 2. காலை கண் விழித்திட வேலையில் தரித்துமே மாலை மட்டும் தொழில் சீலமுடனே செய்தும் வருத்தத்தின் அப்பமே வரும் விருதாப்பலன் கர்த்தர் தம் அன்பருக் கருளுவார் அருந்துயில். 3. கர்த்தரின் சுதந்திரம் பிள்ளைகளே, தாயின் கர்ப்பத்தின் கனிகளும் கடவுளின் செயல்களாம். வாலிப குமரரும் வலியர் கையம்புகள் பல வானம்பராத்தூணி பண்புடன்

கர்த்தர் நம் வீட்டினை – Karthar nam veettinai Read More »

என்னபாக்கியம் அம்மா – Enna Bakkiyam Amma

பல்லவி என்னபாக்கியம் அம்மா!-ஏகனருள் ஏழைக்குக் கிடைத்த தம்மா! அனுபல்லவி உன்னியே தவம்புரிந் தோர் அனேகரிருக்கக் கன்னியெனை நினைத்த கருணையை என்ன சொல்ல? – என்ன சரணங்கள் 1. என்னாத்துமாவே! நீ-இறைவனை என்னாளுமே துதிப்பாய்! என்னாவியே! தேவரட்சகனை யறிந்து என்றும் வணங்கிமகா நன்றியோடு களிப்பாய்! – என்ன 2. பாக்கியவதியானேன்,-இப்பூவின்கண் யார்க்கு மதிப்பானேன்; வாக்கிலே வல்லபரன் மகிமை எனக்குச் செய்தார்; நோக்கிலவ ரரிய நாமம் பரிசுத்தமே. – என்ன 3. ஆண்டவர் இரக்கம்-அடியார்க்கே ஆண்டாண்டாக நிலைக்கும்; மீண்டுமவர் புயத்தால்

என்னபாக்கியம் அம்மா – Enna Bakkiyam Amma Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version