Yesappa Unga Madiyila- இயேசப்பா உங்க மடியில நான்

Yesappa Unga Madiyila- இயேசப்பா உங்க மடியில நான்

இயேசப்பா உங்க மடியில நான்
தலை சாய்க்க நான் வந்துடுவேன்
துன்பங்கள் துயரங்கள் என் வாழ்வில் சூழ்ந்தாலும்
உம் மடியில நான் இளைப்பாறுவேன்

எனக்காய் பரிந்து பேசிடும்
பரிசுத்த ஆவியானவரே
தேற்றிடுமே என்னை ஆற்றிடுமே
உம் வல்ல தழும்புகளாலே

எந்தன் காயங்கள் ஆற்றும்
கல்வாரி நாயகனே
காத்திடுமே என்னை கணிவுடனே
உந்தன் வல்ல கரங்களினாலே

We will be happy to hear your thoughts

      Leave a reply