![Singara Maligaiyil – சிங்கார மாளிகையில் Singara Maligaiyil – சிங்கார மாளிகையில்](https://scontent.fkul15-1.fna.fbcdn.net/v/t1.0-9/156790390_4316978761665039_5564091530505796326_o.jpg?_nc_cat=104&ccb=1-3&_nc_sid=8bfeb9&_nc_ohc=fzbTxOabgogAX9b6G7H&_nc_ht=scontent.fkul15-1.fna&oh=adb0f9a0a1ba3ec83b34e9af2d14f4a5&oe=6078CBB2)
Singara Maligaiyil – சிங்கார மாளிகையில்
சிங்கார மாளிகையில்
ஜெயகீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன்
1. ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து
ஆறுதலடைந்திடுவோம் – அங்கே
அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி
அன்பரில் மகிழ்ந்திடுவோம்
2. துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்
துதியின் உடையுடனே அங்கே
உயரமாம் சீயோன் உன்னதரோடு
களித்து கவி பாடுவோம்
3. முள் முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்
திருமுகம் கண்டிடுவோம் – அங்கே
முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி
தரித்தோராய் துதித்திடுவார்
4. பூமியின் அரசை புதுபாட்டாய் பாடி
புன்னகை பூத்திடுவோம் புது
எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்
மண்ணாசை ஒழித்திடுவோம்
5. அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கிறதே – அவர்
வரும்வேளை யறியாதிருப்பதால் எப்போதும்
ஆயத்தமாயிருப்போம்