அருமையுற நீ இறங்கி -Arumaiyura Nee Erangi
1. அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க,அணுவளவிலாது பங்கம்-அகன்றோடும்;அருளொளி அன்பே யுறைந்து அதிகவுயர்வாய் வளர்ந்தஅகமுழுதுமே நிறைந்து-வழிந்தோடும். 2. திருவரசுன் சீர்குணங்கள் இனிய திருவாசகங்கள்திவிய வரமாக வந்து-எனதாகும்;தினமுமெழிலாயிலங்கி எனதகமுமே கனிந்துசிறுமை செயும் ‘நான்’ மறைந்து-பறந்தோடி. 3. மருவு கிறிஸ்தேசுன் அன்பும் அமருமழகான இன்பும்மலர் முக சந்தோஷ பண்பும்-சுடராமகிமையும் நின்னோடுவந்த எனதிதயமே நிரந்துவளமை வரவே விளைந்து-நிலையாக. 4. உரிமையுடனே உவந்து மனமதியெலாங் கவர்ந்து,உனதடிமையாய்ப் பரிந்து-எனையாளாய்!உனதசுனையாய்ச் சுரந்து அடியருளமே விரிந்து,உதவு நதியாக வந்த-பெருமானே! அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற […]