நினையாத நேரம் வருவார் -Ninaiyadha Neram Varuvar

நினையாத நேரம் வருவார் -Ninaiyadha Neram Varuvar

நினையாத நேரம் வருவார்
நீதியின் சூரியன் இயேசு
கள்வனைப் போல
வருவேன் என்றார்
கண்ணோக்கி பார்த்து பார்த்து
கண் பூத்துப் போனதே

என் மணவாளனே என் ஆத்ம நேசரே
எந்தன் ஏக்கங்கள் அறிந்தவர் நீரே
உமக்காகவே வாழ்கிறேன்
உம்மோடு நான் சேரவே
உமை நோக்கி காத்திருக்கிறேன்
உமக்காக ஏங்குகிறேன் – நினையாத

வெண்மேக மீதிலே என் இயேசு வருகையில்
எக்காள தொனி எந்தன் காதில் முழங்கிட
எதிர் கொண்டு நான் செல்லுவேன்
இயேசுவை நான் சந்திப்பேன்
அவரை நான் கண்டு மகிழ்வேன்
அவரோடு நான் என்றும் வாழ்வேன்

We will be happy to hear your thoughts

      Leave a reply