Kathavugal Adaipadum pothu – கதவுகள் அடைப்படும் போது

Deal Score+1
Deal Score+1

Kathavugal Adaipadum pothu – கதவுகள் அடைப்படும் போது

கதவுகள் அடைப்படும் போது
புது வழியினை அமைத்திடும் தேவன்
எதிர்ப்புகள் நெருக்கிடும் போது
என்னை விடுவித்து காத்திடும் தேவன்
அவர்தான் இயேசு
அவர்தான் இயேசு
அவர்தான் நான் நம்பிடும் கன்மலை
அவர்தான் இயேசு
அவர்தான் இயேசு
அவர்தான் நான் நம்பிடும் கன்மலை

வெள்ளம் போல சாத்தான் என்னை சூழ்ந்து கொண்டாலும்
உள்ளங்கையில் வைத்து என்னை காத்திடும் தேவன் (2)
அவர் வலது கரம் என்னை தாங்கும்
தம் சிறகின் நிழலில் என்னை சேர்க்கும்
என்றென்றும் என்றென்றுமே நான் நம்புவேன்
அவர்தான் இயேசு
அவர்தான் இயேசு
அவர்தான் நான் நம்பிடும் கன்மலை

அரணும் பெலனும் கோட்டையும் எந்தன் துருகமானவர்
வழியும் சத்தியமும் ஜீவனும் எந்தன் பெலனுமானவர் (2)
அவர் கிருபை நிழல் ஒன்றே போதும்
அதின் மறைவில் என் ஜீவன் வாழும்
என்றென்றும் என்றென்றுமே நான் தங்குவேன்
அவர்தான் இயேசு
அவர்தான் இயேசு
அவர்தான் நான் நம்பிடும் கன்மலை

christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo