நம் வாழ்க்கை மாற்றிடவே-Nam Vaazhkai Maatridave

நம் வாழ்க்கை மாற்றிடவே
நம் இயேசு பிறந்தாரைய்யா
என் வாழ்வில் ஒளி ஏற்றவே
எனக்காய் உதித்தரைய்யா

என்னை தேடி ஓடி வந்தீரய்யா
எந்தன் பாவங்களை போக்கிடவே
எனக்காக நீர் பூமியில் பிறந்தீரய்யா
மனுக்குல ஜனங்களை இரட்சிக்கவே

என் தேவைகளை உம்மிடத்தில் கேட்கும் முன்னே
அள்ளி அள்ளி தந்தீரைய்யா
நான் மனிதர் முன்பு மனமுடைந்து போகாமலே
மகிமைப் படுத்தி நீரைய்யா

என்ன கொடுத்து உந்தன் அன்பை ஈடு செய்வேனய்யா

நான் தட்டு தடுமாறி நான் விழும் போதெல்லாம்
என்ன வந்து தாங்கினீரைய்யா
இவ் வாழ்க்கை வெறுத்து பலனற்று இருந்த போது
உம் பெலனை தந்தீரைய்யா

என்ன கொடுத்து உந்தன் அன்பை ஈடு செய்வேனய்யா

We will be happy to hear your thoughts

      Leave a reply