Paamalaigal

Mul Kireedam Poonda – முள் கிரீடம் பூண்ட

1. முள் கிரீடம் பூண்ட நாதனார் மா மாட்சி பெற்றாரே விண் கிரீடம் இப்போ சூடினார் வென்றோராம் வீரரே. 2. உன்னத ஸ்தானம் விண்ணிலே இவர்க்கே சொந்தமாம் மன்னாதி மன்னர் கர்த்தரே விண் மாட்சி ஜோதியாம் 3. அண்ணலின் நாமம் அன்பையும் நன்றாய் அறிந்தோராம் விண்ணோர் மண்ணோர் மகிழ்ச்சியும் இம்மீட்பர் நாதராம் 4. சிலுவையின் மா நிந்தையும் பேரருள் பெறுவார் நிலையாம் நாமம் பூரிப்பும் அன்னோர் அடைகுவார் 5. நாதர்போல் பாரில் பாடுற்றே அவரோடாள்வாராம் தெய்வன்பின் மறை […]

Mul Kireedam Poonda – முள் கிரீடம் பூண்ட Read More »

Manu Sutha Em Veera – மனு சுதா எம் வீரா

1. மனு சுதா, எம் வீரா, வல்ல அன்பா! உம் தொண்டரே இப்பாரில் தீரராம்; எம் இன்பம் துன்பம் சகிக்கும் மா நண்பா! உமக்கு நாங்கள் ஜீவ பலியாம். 2. மா கஷ்ட பாதை சென்றீர் தேவரீரே, சத்திய வார்த்தை நீர் அருளினீர்; அன்போடு காட்டுப் புஷ்பம் வியந்தீரே, வாலிபர் வீரம் கண்டே மகிழ்ந்தீர். 3. பாலியர் போதகா, இளைஞர் நேசா! மாந்தரின் வேந்தர் ஊழியனும் நீர்; நம்பிக்கை ஆறுதல் இன்பத்தின் நாதா! எம் நோக்கம் இன்பம்

Manu Sutha Em Veera – மனு சுதா எம் வீரா Read More »

Magaa Arulin Jothiyai- மகா அருளின் ஜோதியை

1. மகா அருளின் ஜோதியை வீசிடும் வெள்ளி எத்தனை பிரகாசமாய் விளங்கும் தாவீதின் மைந்தன் இயேசுவே நீரே என் மணவாளனே என் பொக்கிஷம் என் பங்கும் முற்றும் சுற்றும் தயவாலும் உண்மையாலும் நீர் நிறைந்தோர் மேன்மை நாமமும் அடைந்தோர். 2. சிநேகமுள்ள பார்வையால் அடியேனை நீர் நோக்கினால் பரம் வெளிச்சம் காட்டும் நீர் சொல்லும் இன்ப சொற்களும் தரும் சரீரம் ரத்தமும் என் ஆத்துமத்தை ஆற்றும் தேற, சேர கிட்டும் என்னை நற்றிடனைத் தந்தே தேற்றும் அன்புமாய்

Magaa Arulin Jothiyai- மகா அருளின் ஜோதியை Read More »

Piriyamaana Yesuvae – பிரியமான இயேசுவே

1.பிரியமான இயேசுவே, என் நெஞ்சைத் தயவாக நீர் பூரிப்பாக்கி, என்னிலே மிகுந்த நிறைவாக தெய்வீக அன்பை ஊற்றியே, பேரருள் தந்த உம்மையே நான் துதிசெய்வேனாக. 2.என் நெஞ்சில் உம்மால் பற்றின அன்பென்னும் தீ எரியும்; என் மனதும்மால் உத்தம மகிழ்ச்சியை அறியும்; நான் உம்மை நோக்கும் போதெல்லாம், என் துக்கம் உம்மிலே உண்டாம் அருளினால் தெளியும். 3.நீர் என் வெளிச்சம்; உம்மால் திறந்த முகமாக நான் பிதாவின் இன்ப நெஞ்சைத்தான் என் ஆறுதலுக்காக கண்ணோக்கும்போது, தயவாய் நீர்

Piriyamaana Yesuvae – பிரியமான இயேசுவே Read More »

Neer Divviya Vazhi – நீர் திவ்விய வழி

1. நீர் திவ்விய வழி, இயேசுவே நீர் பாவ நாசர்தாம் பிதாவிடத்தில் சேர்வதும் உமது மூலமாம். 2. நீர் திவ்விய சத்தியம், இயேசுவே உம் வாக்கு ஞானமாம்; என் நெஞ்சில் அதின் ஜோதியால் பிரகாசமும் உண்டாம். 3. நீர் திவ்விய ஜீவன், இயேசுவே வெம் சாவை ஜெயித்தீர்; உம்மைப் பின்பற்றும் யாவர்க்கும் சாகாமை ஈகுவீர். 4. நீர் வழி, சத்தியம், ஜீவனும்; அவ்வழி செல்லவும், சத்தியம் பற்றி, ஜீவனை அடையவும் செய்யும்.

Neer Divviya Vazhi – நீர் திவ்விய வழி Read More »

Nal Meetpar Yesu Naamamae – நல் மீட்பர் இயேசு நாமமே

1. நல் மீட்பர் இயேசு நாமமே என் காதுக்கின்பமாம் புண்பட்ட நெஞ்சை ஆற்றவே ஊற்றுண்ட தைலமாம். 2. அந்நாமம் நைந்த ஆவியை நன்றாகத் தேற்றுமே; துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை திடப்படுத்துமே. 3. பசித்த ஆத்துமாவுக்கு மன்னாவைப் போலாகும்! இளைத்துப் போன ஆவிக்கு ஆரோக்கியம் தந்திடும். 4. என் ரட்சகா, என் கேடகம், என் கோட்டையும் நீரே! நிறைந்த அருள் பொக்கிஷம், அனைத்தும் நீர்தாமே. 5. மா நேசர், மேய்ப்பர், பர்த்தாவும், என் ஜீவனும் நீரே; என் தீர்க்கரும்,

Nal Meetpar Yesu Naamamae – நல் மீட்பர் இயேசு நாமமே Read More »

Jeevathipathiyae Jothiyae – ஜீவாதிபதி ஜோதியே

ஜீவாதிபதி, ஜோதியே, பக்தரின் இன்ப இயேசுவே லோகின் மா இன்பம் ருசித்தும் சேர்ந்தோம் உம் பாதமே மீண்டும் பாதம் சேர்ந்தோரை மீட்பரே இவ்வுண்மை என்றும் மாறாதே தேடுவோர்க்கு நீர் நல்லவர் பற்றுவோர்க்கு சம்பூரணர் விண் அப்பம் உம்மில் ருசிப்போம் முற்றும் உட்கொள்ள ஆசிப்போம் நீர் ஜீவ ஊற்று உம்மிலே உள்ளத்தின் தாகம் தீருமே மாறிடும் வாழ்க்கை யாவிலும் எம் ஆத்மா உம்மை வாஞ்சிக்கும் உம் அருட் பார்வை இன்பமே விசுவாசிப்போருக்கு பாக்கியமே தங்கும் எம்மோடு, இயேசுவே எக்காலும்

Jeevathipathiyae Jothiyae – ஜீவாதிபதி ஜோதியே Read More »

En Meippar Yesu – என் மேய்ப்பர் இயேசு

1. என் மேய்ப்பர் இயேசு கிறிஸ்துதான், நான் தாழ்ச்சியடையேனே; ஆட்கொண்டோர் சொந்தமான நான் குறையடைகிலேனே. 2. ஜீவாற்றில் ஓடும் தண்ணீரால் என் ஆத்மத் தாகம் தீர்ப்பார்; மெய் மன்னாவாம் தம் வார்த்தையால் நல் மேய்ச்சல் எனக்கீவார். 3. நான் பாதை விட்டு ஓடுங்கால் அன்பாகத் தேடிப் பார்ப்பார்; தோள்மீதில் ஏற்றிக் காப்பதால் மகா சந்தோஷங்கொள்வார். 4. சா நிழல் பள்ளத்தாக்கிலே நான் போக நேரிட்டாலும், உன் அன்பின் கோலைப் பற்றவே, அதே என் வழி காட்டும். 5.

En Meippar Yesu – என் மேய்ப்பர் இயேசு Read More »

Unnathamaana Maa Raajavaana – உன்னதமான மா இராஜாவான

1. உன்னதமான மா இராஜாவான சீர் சிறந்த இயேசுவே; உம்மில் களித்து உம்மைத் துதித்து நேசித்துக்கொண்டிருப்பேனே. 2. பூ மலர் காடும் பயிர் ஓங்கும் நாடும் அந்தமும் சிறப்புமாம்; இயேசுவின் அந்தம் எனக்கானந்தம் என் மனதின் குளிர்ச்சியாம் 3. அண்டங்கள் யாவும் சூரியன் நிலாவும் அந்தமாய் பிரகாசிக்கும்; அவர் முன்பாக மா ஜோதியாக மினுங்கும் யாவும் மங்கிப்போம். 4. விண் மண்ணுடைய மகிமை மறைய அவர் அந்தமானவர்; வானத்திலேயும் பூமியிலேயும் நான் நாடினோர் என் ரட்சகர்.

Unnathamaana Maa Raajavaana – உன்னதமான மா இராஜாவான Read More »

Yesuvae Neerthaamae – இயேசுவே நீர்தாமே

1.இயேசுவே, நீர்தாமே என் மகிழ்ச்சியாமே நீர் என் பூரிப்பு; என் மனம் நாள்தோறும் ஆசை வாஞ்சையோடும் ஏங்குகின்றது. கர்த்தரே, உலகிலே உம்மை யன்றி வாழ்விராது, இன்பமுங் காணாது. 2.நல் மறைவின் கீழே நான் ஒதுங்க, நீரே என் அரண்மனை; சாத்தான் வர்மிக்கட்டும், எதிரி சீறட்டும், இயேசு என் துணை. திகிலும் பயங்களும் பாவ நரகக்கெடியும் இயேசுவால் தணியும். 3.வலு சர்ப்பத்துக்கும் சாவின் பற்களுக்கும் நான் திடுக்கிடேன். லோகமே, விரோதி; நான் சங்கீதம் ஓதி தோத்திரிக்கிறேன். தெய்வக்கை என்

Yesuvae Neerthaamae – இயேசுவே நீர்தாமே Read More »

Yesuvae Ummai Thiyaanathil – இயேசுவே உம்மை

1. இயேசுவே உம்மை தியானித்தால் உள்ளம் கனியுமே கண்ணார உம்மைக் காணுங்கால் பரமானந்தமே. 2. மானிட மீட்பர் இயேசுவின் சீர் நாமம் போலவே இன் கீத நாதம் ஆய்ந்திடின் உண்டோ இப்பாரிலே? 3. நீர் நொறுங்குண்ட நெஞ்சுக்கு நம்பிக்கை ஆகுவீர் நீர் சாந்தமுள்ள மாந்தர்க்கு சந்தோஷம் ஈகுவீர். 4. கேட்போர்க்கும் தேடுவோர்க்கும் நீர் ஈவீர் எந்நன்மையும் கண்டடைந்தோரின் பாக்கியசீர் யார் சொல்ல முடியும்? 5. இயேசுவின் அன்பை உணர்ந்து மெய் பக்தர் அறிவார் அவ்வன்பின் ஆழம் அளந்து

Yesuvae Ummai Thiyaanathil – இயேசுவே உம்மை Read More »

Yesu Kiristhuvae Ulagathilae – இயேசு கிறிஸ்துவே உலகத்திலே

1. இயேசு கிறிஸ்துவே உலகத்திலே கெட்டுப்போனவருக்கான ஒளியும் உயிருமான ரட்சகர் நீரே இயேசு கிறிஸ்துவே. 2. என்னை மீட்க நீர் ஜீவனை விட்டீர் குற்றத்தை எல்லாம் குலைக்க, என்னைத் தீமைக்கு மறைக்க எனக்காக நீர் ஜீவனை விட்டீர். 3. எங்கள் மீட்புக்கு லோகத் தோற்றத்து நாளின் முன்னே வார்த்தை தந்தீர்; காலமாகையில் பிறந்தீர் பாவிகளுக்கு மீட்புண்டாயிற்று. 4. வெற்றி வேந்தரே, பாவம் சாபம் பேய் நரகத்தையும் ஜெயித்தீர்; நாங்கள் வாழ நீர் மரித்தீர்; உம்மால் துஷ்டப் பேய்

Yesu Kiristhuvae Ulagathilae – இயேசு கிறிஸ்துவே உலகத்திலே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version