வருவாய் கருணா நிதியே – Varuvaai Karunaa Nithiye

வருவாய்! கருணா நிதியே!- புது
வருடமதில் துதி

1.வருடங்கள் வளர்ந்து வருகின்றவாறே
இருதயம் ஆவியில் இலங்கி யொரு
தருவினில் மாண்டுயிர்த் தெழுந்த நின் சீர் போல்
வருபவந் தனிலிறந் துயர் கதியே-வாகா யேகிட

2.ஆண்டதிற் புதிய ஆண்மையு மருளும்
வேண்டிய வாறே விளங்கி வளர்
ஆண்டவன் மந்தையில் ஆற்றிடத் தொண்டு
வேண்டிய மட்டும் விரைந்தீவாய்-வேத நாயகா

3.ஆதியிற் சபைகள் ஆகியவாறே
ஆதிபன் ஆவியின் அபிஷேகம்
ஜோதியோடேற்று ஜொலித்திட நாளும்
வேதியரோடு விழைந்துழைப்போம்-வீரா வேசமாய்

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version