மேகங்கள் முழங்கிட – Megangal Muzhangida
மேகங்கள் முழங்கிட – Megangal Muzhangida Tamil Christmas song lyrics, Written tune and sung by Fr. Soosai Alphonse SDB
மேகங்கள் முழங்கிட வானவர் கூட்டத்தின் வாழ்த்தொலி கேட்கிறது
இறை பிறப்பில் இம் மண்ணினில் மாந்தரின் மனங்களும் நிறைவுடன் மகிழ்கின்றது-2
குளிரினில் (லலலா) குடிலினில் (லலலா) குழந்தையின் அழுகுரல் அழைக்கிது
அனைவரும் (லலலா) தொழுவத்தில் (லலலா) திருப்பலி ஆற்றிட விரைந்திடுவோம் -2
Gloria Gloria in excelsis Deo – 2
மேகங்கள் முழங்கிட வானவர் கூட்டத்தின் வாழ்த்தொலி கேட்கிறது
இறை பிறப்பில் இம் மண்ணினில் மாந்தரின் மனங்களும் நிறைவுடன் மகிழ்கின்றது
[Verse 1]
பாரமான மனங்கள் காலமெல்லாம் மகிழ
பாசமான பச்சிளம் குழந்தையின் -பலி இதுவே பலி இதுவே
சோகமெல்லாம் தினமும் சுகங்களாக மாற்ற
கோமகன் நம்மை ஒன்று கூட்டிடும் -பலி இதுவே பலி இதுவே
பாரமான மனங்கள் காலமெல்லாம் மகிழ
பாசமான பச்சிளம் குழந்தையின் -பலி இதுவே பலி இதுவே
சோகமெல்லாம் தினமும் சுகங்களாக மாற்ற
கோமகன் நம்மை ஒன்று கூட்டிடும் -பலி இதுவே பலி இதுவே
வாருங்கள் வாருங்கள் வானவர் வாழ்த்தொலி பாடிடுவோம்
கூடுங்கள் கொண்டாடுங்கள் மன்னவர் பிறப்பினில் மகிழ்ந்திடுவோம்
Gloria Gloria in excelsis Deo – 2
[Chorus]
மேகங்கள் முழங்கிட வானவர் கூட்டத்தின் வாழ்த்தொலி கேட்கிறது
இறை பிறப்பில் இம் மண்ணினில் மாந்தரின் மனங்களும் நிறைவுடன் மகிழ்கின்றது
[Verse 2]
மார்கழியின் இரவில் மரியன்னையின் மடியில்
மழலை கொஞ்சி மயங்கும் மன்னவன் பலி இதுவே பலி இதுவே
குளிரில் உறையும் பனியாய் குழந்தையாக வாழ்வில்
குறைகள் நீக்கி குருதி சிந்தும் பலி இதுவே பலி இதுவே
மார்கழியின் இரவில் மரியன்னையின் மடியில்
மழலை கொஞ்சி மயங்கும் மன்னவன் பலி இதுவே பலி இதுவே
குளிரில் உறையும் பனியாய் குழந்தையாக வாழ்வில்
குறைகள் நீக்கி குருதி சிந்தும் பலி இதுவே பலி இதுவே
வாருங்கள் வாருங்கள் வானவர் வாழ்த்தொலி பாடிடுவோம்
கூடுங்கள் கொண்டாடுங்கள் மன்னவர் பிறப்பினில் மகிழ்ந்திடுவோம்
Gloria Gloria in excelsis Deo – 2
[Chorus]
மேகங்கள் முழங்கிட வானவர் கூட்டத்தின் வாழ்த்தொலி கேட்கிறது
இறை பிறப்பில் இம் மண்ணினில் மாந்தரின் மனங்களும் நிறைவுடன் மகிழ்கின்றது
Megangal Muzhangida song lyrics in English
மேகங்கள் முழங்கிட song lyrics, Megangal Muzhangida song lyrics, Tamil catholic Christmas songs
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article discusses the Tamil Christmas song ‘மேகங்கள் முழங்கிட – Megangal Muzhangida’.
- Fr. Soosai Alphonse SDB wrote and performed the song.
- The lyrics express themes of joy and divine celebration during the Christmas season.
- The song includes multiple verses and a chorus, emphasizing happiness in the hearts of people.
- It highlights the importance of coming together to celebrate the birth of the divine.

