Vaan Thoothar senaigal paada – வான் தூதர் சேனைகள் பாட
Vaan Thoothar senaigal paada Tamil christmas song lyrics – வான் தூதர் சேனைகள் பாட, யூத ராஜ சிங்கம் written tune by Revd J. Jose Dobin
குளு குளு குளு குளிரினிலே
நடு நடு நடு நள் இரவினிலே
சுட சுட சுட நற்செய்தியாய்
யூத ராஜ சிங்கம் இயேசு
பாலகனாக பிறந்து விட்டார்
படை படையென தூதர்கள்
பட படப்புடன் மேய்பர்கள்
பர பரப்புடன் ஞானிகள்
தேடித் தேடி ஓடி ஓடி
தாவீதின் ஊரில் சென்றது போல
நாமும் கூடி வாழ்த்துப்பாடி மகிழ்ந்திடுவோம்
வான் தூதர் சேனைகள் பாட
வயல்வெளியில் மந்தை மேய்ப்பர்கள் ஆட
இரவும் குளிரும் இனிமையானதே
பயமும் திகிலும் நற்செய்தியால்
பனி போல் மறைந்ததே
யூத ராஜ சிங்கம் பிறந்தார்- இயேசு
தேவ மகிமையாவும் துறந்தார்
பெத்தலை ஊரிலே பிறந்தார்
மரி மடியிலே தவழ்ந்தார்
அவர் நமக்காக இம்மானுவேலாய்
பிறந்தார்இயேசு நாமம் அதிசயமாமே
அவர் ஆலோசனைக் கர்த்தருமாமே, வல்லமையுள்ள தேவனே
நித்ய பிதா
சமாதான பிரபுவாக வந்தாரே
இயேசு பாலன் பிறந்தது எங்கே
என்று ஞானிகளும் பயணம் தொடரவே
விண்மீன் இயேசு பிறப்பை காட்டவே
பொன் போளம் தூபவர்க்கம் படைத்தாரே பணிந்தார்
Vaan Thoothar senaigal paada song lyrics , வான் தூதர் சேனைகள் பாட song lyrics, Tamil Christmas songs
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song ‘Vaan Thoothar senaigal paada – வான் தூதர் சேனைகள் பாட’.
- The song celebrates the birth of Jesus, emphasizing joy and unity among people.
- It mentions angels, shepherds, and wise men, highlighting their roles during Jesus’ birth.
- The lyrics express themes of peace, wonder, and the significance of Jesus’ name.

