Um Anbil Naan vilunthuvittean song lyrics – உம் அன்பில் நான் விழுந்துவிட்டேன்

Deal Score0
Deal Score0

Um Anbil Naan vilunthuvittean song lyrics – உம் அன்பில் நான் விழுந்துவிட்டேன்

உயிரோடு கலந்தவரே
எனக்காய் உயிரையும் தந்த தெய்வம் நீரே
நிழலே..உயிரே..அன்பே..
நீர் இல்லாமல் நான் இல்லையே
நீர் என்னோடு இருக்க பயமேன்

வாழ்க்கையின் அலைகளிலே
எந்தன் கைப் பிடித்தீரே
கழுகைப்போல உயர உயருகிறேனே
எல்லா நாளும் என்மனம் உம்மையே நினைக்கிறதே
உன் அன்பில்லாமல் நான் என்ன செய்வேன்

உம் அன்பில் நான் விழுந்துவிட்டேன்
என்னையே மறந்து விட்டேன் – என்
வறண்ட இதயத்தில் அன்பின் ஈரம் வந்ததே
வாழும் வாழ்க்கை எல்லாமே
ஜீவன் தந்த உமக்குதானே
எந்தன் மனதைத் திருடியவர் நீர் தானே…

உலகில் அன்பைத்தேடி
அலைந்த நாட்கள் உண்டு
நலமா என்று கேட்க ஆளில்லா நாட்கள் உண்டு
என் மனம் எனக்கே புரியா
நாட்கள் உண்டு உண்டு
என்னை நானே வெறுத்த நாட்கள் உண்டு

இந்த குழப்பங்கள் நடுவில்
உம் அன்பை நான் கண்டேனே
வாழ்ந்திடும் எந்தன் வாழ்க்கையை
உம் கரங்களில் நான் தந்தேனே

அன்று என் இதயம் சிறகடித்துப் பறந்ததே
அன்று பறந்த எந்தன் மனம் விண்ணைத்தாண்டிப் போனதே..

உம் அன்பில் நான் விழுந்துவிட்டேன்
என்னையே மறந்து விட்டேன் – என்
வறண்ட இதயத்தில் அன்பின் ஈரம் வந்ததே
வாழும் வாழ்க்கை எல்லாமே
ஜீவன் தந்த உமக்குதானே
எந்தன் மனதைத் திருடியவர் நீர் தானே

Jeba
      Tamil Christians songs book
      Logo