Then inimaiyilum Song Lyrics – தேன் இனிமையிலும்

Then inimaiyilum Song Lyrics – தேன் இனிமையிலும்

தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் திவ்விய மதுர மாமே;-அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே.
.
சரணங்கள்
1. காசினிதனிலே நேசமதாகக் கஷ்டத்தை உத்தரித்தே;-பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்; கண்டுணர் நீ, மனமே.
.
2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத் தாமே ஈந்தவராம்;-பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு; நிதம் துதி, என் மனமே.
.
3. காலையில் பனிபோல் மாயமாய் உலகம் உபாயமாய் நீங்கிவிடும்;-என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ, மனமே.
.
4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேச ரிடம்;-நீயும்
அன்பதாய்ச் சேர்ந்தால் அணைத்துனைக் காப்பார்; ஆசைகொள் நீ, மனமே.
.
5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்று நாமம்;-அதைப்
பூண்டுகொண் டால்தான் பொன்னகர் வாழ்வில் புகுவாய் நீ, மனமே.

Then inimaiyilum Song Lyrics in English 

Then inimaiyilum Yesuvin Naamam Dhivviya Mathura Maamae Athai
Theadiyae Naadi Oodiyae Varuvaai Dhinamum Nee Manamae

1.Kaasinithanilae Neasamathaaga Kastaththai Uththariththae Paava
Kasadathai Aruththu Saabaththai Tholaiththaar Kandunar Nee Maname

2.Paaviyai Meetkka Thaaviyae Uyirai Thaamae Eenthavarram Pinnum
Neamiyaam Karunai Nilaivaramundu Nitham Thuthi En Maname

3.Kaalaiyil Panipol Maayamaai Ulagam Ubayamaai Neengividum Entrum
Karththarin Paatham Nitchayam Nambu Karuththaai Nee Maname

4.Thunbaththil Inbam Thollaiyil Nalla Thunaivaraam Neasaridam Neeyum
Anbathaai Searnthaal Anaiththunai Kaappaar Aasaikol Nee Maname

5.Poolagaththaarum Mealogaththaarum Pugalnthu Pottru Naamam Athai
Poondu Kondaalthaan Ponnagar Vaazhvil Puguvaai Nee Maname

இயேசுவின் நாமமே திருநாமம் – முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்.

1. காசினியில் அதனுக் கிணையில்லையே – விசு
வாசித்த பேர்களுக்குக் குறையில்லையே.

2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் – அதை
நித்தமும் தொழுபவர்க்கு ஜெயநாமம்.

3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் – இது
சத்திய விதேய மனமொத்தநாமம்.

4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும்நாமம் – நமை
அண்டிடும்பேய் பயந்தோடு தேவநாமம்.

5. பட்சமுள்ள ரட்சைசெயு முபகாரி – பெரும்
பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி.

தேன் இனிமையிலும் ஸ்வரங்கள் :
1.கமபத பா மக ரிகமப மா கரி
சரிகம கா ரிச ச நி ப சா
2.பநிசா நிசரீ சரிகா ரிகமா
சநிதபமகரிச சரிகமபா
3.கமபாமகரிச சரி கம பா
பதபா மபமா கமகா கமபா
ச ரீ ரி கமபா | சநிதப கமபா
கமபா | ரிகமா |சரிகா |நிசரீ
பநிசா | நிசரீ |நிசரீ |சரிகா |
சரிகா | ரிகமா | ரிகமா| கமபா|
ம த ப |க ப ம | ரி ம க |ச க ரி | நி ச ரி ப |
ச நி ப நி ச நி சரி | ச ச க ரிகமபா |
நிசரி சாரிச நிசாசா| சா ரிக ரீ க ரி |ச ரீ ரீ
ரி க ரி க ம க ரி கா கா பா பாபா
ச நி த ப க பா பா | ச த ப ம க பா |
ச த ப மக தப மக ரி |ம க ரி ச நி ||

We will be happy to hear your thoughts

      Leave a reply