YEZHAIYIN KUDILIL YEZHMAIYIN VADIVIL – ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில்

ஏழையின் குடிலில்
ஏழ்மையின் வடிவில்
எழுந்திட்ட பாலனே வாராயோ
நெஞ்சமே உனது
மஞ்சமாய் நினைந்து
எழுந்திட்ட தேவனே வாராயோ
உணவாய் வாராயோ
உயிராய் வாராயோ
உணர்வாய் வாராயோ
உறவாய் வாராயோ

1.தன்னை தரும் அன்பே
உயர் பண்பு என்று
உன்னை தர வந்தாய் என் தேவனே
ஜீவன் தரும் வார்த்தை
வாழ்வாக வந்து
பாவம் தனை வென்றாய் என் தேவனே
உணவின் வடிவில் இறைவனே -மனம்
உறவினில் மலருதே
உனது வரவில் தேவனே-நிதம்
உலகமே மகிழுதே

2.விண்ணின் மணி ஒன்று
விருந்தென்று கண்டு
உன்னை பெற வந்தேன் என்தேவனே
பாரில் கரை சேர்க்கும்
மீட்பாக வந்து
பாசம் தனை தந்தாய் என் ஆயனே
புதுமை புரிந்திடும் இறைவனே -புவி
மறுமையை அடையவே
அமைதி நிலவிட வேண்டுமே -எமை
அழைத்திடும் தலைவனே

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version