Urangaamal Ayaramal Kaatheer உறங்காமல் அயராமல் காத்தீர்

Urangaamal Ayaramal Kaatheer உறங்காமல் அயராமல் காத்தீர்

உறங்காமல் அயராமல் காத்தீர்
என் இயேசு ராஜா நீரே
திகையாதே கலங்காதே என்றீர்
கர்த்தாதி கர்த்தர் நீரே

அல்லேலூயா ஆராதனை – 4

1. நான் செல்லும் பாதைக்கு தீபமும் நீரே
வேதத்தின் வெளிச்சமும் நீர்
கடும் இருளாகினும் பெரும் புயலாகினும் 2
என் இயேசு என் அருகில் பயமில்லையே அல்லேலூயா . . .

2. தகப்பன் தன் பிள்ளையை சுமப்பது போல
நீரே சுமந்து வந்தீர்
கற்பாறை நிலத்தில் பாலைவனத்தில் 2
என் கால்களுக்கு அரணானீரே அல்லேலூயா . . .

3. சேற்றினில் முளைத்த செந்தாமரைப் போல்
என்னையும் மாற்றினீரே
உலகம் தடுத்தாலும் சொந்தங்கள் வெறுத்தாலும் 2
உமக்காக என்னை மலரச்செய்தீர் அல்லேலூயா . . .

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version