Pajithidum Suvisheda Thirusabaiyaarae – பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே
பல்லவி பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே, பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே. சரணங்கள் 1. பஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தோரே, பரனருளால் ஜெயமடைந்தீரே, துஜம்[1] பிடித்தே ஜெயமெனப் புகல்வீரே, தோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரே. – பஜி 2. நித்ய சுவிசேடமே நேர்வழியாமே, நிமலனருள் வழிபோவேமே. சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே, தத்வ குணாகரன் தனைத்துதிப்போமே. – பஜி 3. திருக்குருசில் மரித்தோரது நேசம், தினம் மறவாதே, வைவிசுவாசம். இரக்க புண்ணியங்களால் எழில் நகர்வாசம், இனிபெறலாமென வெண்ணுதல் மோசம். – பஜி
Pajithidum Suvisheda Thirusabaiyaarae – பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே Read More »