Innamum Naam Yesu Paathathail – இன்னமும் நாம் யேசு பாதத்தில்

இன்னமும் நாம் யேசு பாதத்தில் சந்திக்கும் வரை
என்றும் கர்த்தருன்னைக் காப்பாரே

அனுபல்லவி

தன்னுடைய காவலுன்மேல்
தப்பாம் வைத்துத்தற்காத்துக்
தன்னிருகரத்தால் உன்னைத்
தாங்கியே காத்துக்கொண்டு – இன்ன

சரணங்கள்

தன்னிரு சிறகுகளின் கீழ்
உன்னை மறைத்துத்
இன்னமும் திருமன்னாவை
என்றும் உனக்களித்தே
இன்பமோடே உன்னைத் தாங்கி
எல்லாத் தீங்குக்குந் தற்காத்து – இன்ன

ஜீவியத்தின் பாரம் உன்னையே வதைத்திடாமல்
சீருடனே கர்த்தர் காப்பரே
பாவ சோதனைகள் உன்மேல்
படர்ந்து பிடித்திடாமல்
பாலித்தணைத்தே உன்னையே
பட்சமோடே பாதுகாத்து – இன்ன

ஆண்டவனின் அன்பின் கொடிதான் உன்மேல் பறந்து
ஆட மகிழ்ந் தானந்தங்கொள்வாய்
நீண்டிடும் ஆயுளளித்து நிதமும் சுகத்தைத் தந்து
நீண்ட காலமாக உன்னை
நேசித்து பரிபாலித்து – இன்ன

நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்.

According to my earnest expectation and my hope, that in nothing I shall be ashamed, but that with all boldness, as always, so now also Christ shall be magnified in my body, whether it be by life, or by death.

பிலிப்பியர் : Philippians:1:20

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version