என் பாத்திரம் நிரம்பி – En Paaththiram Nirambi

என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது

என் பாத்திரம் நிரம்பி – En Paaththiram Nirambi


எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும் – என் பாத்திரம்

1.அபிஷேக நதி நானே
அகிலமெங்கும் பரவிடுவேன்
ஏராளமான மீன்கள் திரளான உயிரினங்கள்
நதி பாயும் இடமெல்லாம் நான் போகும்
இடமெல்லாம்-எனக்கு

2.ஆனந்த தைலம் நானே
புலம்பலுக்கு எதிரானேன்
துதிஉடை போர்த்திடுவேன் சாம்பல் நீக்கிடுவேன்
அலங்காரமாக்கிடுவேன் -சபையை

3.கனி கொடுக்கும் மரம் நானே
நாள்தோறும் (புதுக்) கனி கொடுப்பேன்
இலைகள் உதிர்வதில்லை கனிகள் கெடுவதில்லை-என்
விருந்தும் மருந்தும் நானே – சபைக்கு

4.முழங்கிடுவேன் தினம் சுவிசேஷம்
ஒடுக்கப்பட்ட இந்த உலகத்திற்கு
காயங்கள் ஆற்றிடுவேன் கட்டுக்கள் அவிழ்த்திடுவேன்
விடுதலை பறைசாற்றுவேன்

5.அயல்மொழிகள் தினம் பேசிடுவேன்
இறைவாக்கு உரைத்திடுவேன்
சாத்தானை துரத்திடுவேன் கரம் நீட்டி சுகம் கூறுவேன்
அதிசயம் தினம் காண்பேன்

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version