Aa Kazhi Koornthu Poorithu – ஆ களிகூர்ந்து பூரித்து

1. ஆ, களிகூர்ந்து பூரித்து
மகிழ், என் மனதே
பராபரன்தான் உனது
அநந்த பங்காமே.

2. அவர் உன் பங்கு, உன் பலன்;
உன் கேடகம் நன்றாய்த்
திடப்படுத்தும் உன் திடன்;
நீ கைவிடப்படாய்.

3. உன் நெஞ்சு ராவும் பகலும்
துக்கிப்பதென்ன? நீ
உன் கவலை, அனைத்தையும்
கர்த்தாவுக்கொப்புவி.

4. உன் சிறு வயது முதல்
பராமரித்தாரே;
கர்த்தாவால் வெகு மோசங்கள்
விலக்கப்பட்டதே.

5. கர்த்தாவின் ஆளுகை எல்லாம்
தப்பற்றதல்லவோ,
அவர் கைசெய்கிறதெல்லாம்
நன்றாய் முடியாதோ?

6. ஆகையினால் கர்த்தாவுக்கு
நீ பிள்ளைப் பக்தியாய்
எப்போதும் கீழ்ப்படிந்திரு
அப்போது வாழ்வாய்.

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version