ஓங்கிய புயம் கொண்டு – Oongiya Puyam kondu balatha
ஓங்கிய புயம் கொண்டு – Oongiya Puyam kondu balatha
ஓங்கிய புயம் கொண்டு பலத்த கரம் கொண்டு
தாங்கி நடத்தி வந்தீர் மேகஸ்தம்பமாய் அக்கினி ஸ்தம்பமாய்
இரவு பகலாய் காத்து வந்தீர்.
மறப்பேனோ நான் கடந்த பாதையை
மறப்பேனோ நான் நீர் செய்த நன்மையை
இருக்கிறவராகவே இருக்கிறேன் என்றீரே
கூடவே இருந்தீர் வழுவாமல் காத்தீர்
பார்வோனின் சேனை தொடர்ந்த சூழ்நிலையில்
செங்கடல் பிளந்தே வழியும் திறந்தீரே
எகிப்தியர் கண்முன்னே துணையாய் நீர் நின்றீர்
யுத்தம் நீர் செய்தீர் வெற்றி காணச் செய்தீர்
தூதர்கள் உண்ணும் உணவால் போஷித்தீர்
பசியைப் போக்கினீர் பாதுகாத்து வந்தீர்
செருப்பு தேயல வஸ்திரம் கிளியல
தயவாய் நடத்தினீர் கிருபையாய் காத்திட்டீர்
யெகோவா ஷம்மாவாய் கூடவே இருந்தீரே
யெகோவா நிசியாய் வெற்றியை தந்தீரே
Oongiya Puyam kondu balatha song lyrics in English
Oongiya Puyam kondu balatha