Kurusinil Thongiyae – குருசினில் தொங்கியே குருதியும்

குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கதா மலைதனிலே – நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி,
கொள்ளாய் கண் கொண்டு

  1. சிரசினில் முள்முடி உறுத்திட, அறைந்தே
    சிலுவையில் சேர்த்தையோ! – தீயர்
    திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,
    சேனைத்திரள் சூழ — குருசினில்
  2. பாதகர் நடுவில் பாவியினேசன்
    பாதகன் போல் தொங்க – யூத
    பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
    படுத்திய கொடுமைதனை — குருசினில்
  3. சூரிய சந்திர சகல வான் சேனைகள்
    சகியாமல், நாணுதையோ! – தேவ
    சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
    துடிக்கா நெஞ்சுமுண்டோ? — குருசினில்
  4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
    இறைவன் விலாவதிலே – அவர்
    தீட்டிய திட்சைக் குருதியும் ஜலமும்
    திறந்தூறோடுது பார் — குருசினில்
  5. எருசலேம் மாதே, மறுகி நீயழுது
    ஏங்கிப் புலம்பலையோ? – நின்
    எருசலையதிபன் இள மணவாளன்

We will be happy to hear your thoughts

      Leave a reply