முள்ளுள்ள புதர்களின் மத்தியில்-Mullulla Putharkalin Maththiyil

1. முள்ளுள்ள புதர்களின் மத்தியில்
ஒரு ரோஜா புஷ்பம் உளதே
மா சௌந்தரியம் ஆனவரே
இயேசு நாதனே எம் தேவனே

வாழ்த்துமே எங்கள் தேவனே
ஜீவ நாட்களிலும் மறுயாத்திரையிலும்
நன்றியோடே நாம் பாடிடுவோம் – (2)

2. இதயம் மிக கசந்து நொந்து
மனம் கிலேசம் அடைந்திடும் நாள்
மனப் புண்ணில் எண்ணெய்
தடவி மன ஆறுதல் தந்திடுவார்

3. தந்தை தாயும் எம் சொந்தமானோரும்
கைவிட்டாலும் நம்மவர் மாறிடார்
துன்பத்தில் எம்மை தாங்கிடுவார்
இன்பங்கள் எமக்கீந்திடுவார்

We will be happy to hear your thoughts

      Leave a reply