ஆயிரம் தலைமுறை – AAYIRAM THALAIMURAI

ஆயிரம் தலைமுறை – AAYIRAM THALAIMURAI

LYRICS,
ஆயிரம் தலைமுறைக்கும் கிருபை செய்கின்றவர்
சேனையின் கர்த்தராம் மகத்துவமானவர்

யோசனையில் பெரியவர்
செயலிலே வல்லவர்

அவர் நம்மோடு இருந்து செய்யும் காரியம்
பயங்கரமாயிருக்கும்

குற்றங்களை மன்னித்து சுத்திகரித்து
தம் ஆவியை நமக்குள்ளே வைத்திடுவார்
உலர்ந்து போன வாழ்க்கையை
தம் வார்த்தையால் உயிர்ப்பிப்பார்

குறித்த காலத்திற்கு தரிசனம் உள்ளது அது
முடிவிலே விளங்கும் பொய் சொல்லாது
அவரே தேவன் அவர் சத்தியம்
சொன்னதை செய்து முடிப்பார்

அவர் நம்மோடு இருந்து செய்யும் காரியம்
பயங்கரமாயிருக்கும்

அவர் உன்னோடு இருந்து செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்

அவர் என்னோடு இருந்து செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்

அவர் சபையோடு இருந்து செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்