Vinnayum Mannayum Padaithavaraam song lyrics – விண்ணையும் மண்ணையும் படைத்தவராம்

Deal Score+1
Deal Score+1

Vinnayum Mannayum Padaithavaraam song lyrics – விண்ணையும் மண்ணையும் படைத்தவராம்

  1. விண்ணையும் மண்ணையும் படைத்தவராம்
    கடவுள் ஒருவர் இருக்கின்றார்
    தந்தை, மகன், தூய ஆவியராய்
    ஒன்றாய் வாழ்வோரை நம்புகிறேன்.
  2. தூய ஆவியின் வல்லமையால்
    இறைமகன் நமக்காய் மனிதரானார்
    கன்னி மரியிடம் பிறந்தவராம்
    இயேசுவை உறுதியாய் நம்புகிறேன்
  3. பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்
    சிலுவையில் இறந்து அடக்கப்பட்டார்
    மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்
    இறப்பின் மீதே வெற்றி கொண்டார்.
  4. விண்ணகம் வாழும் தந்தையிடம்
    அரியணைக் கொண்டு இருக்கின்றார்
    உலகம் முடியும் காலத்திலே
    நடுவராய் திரும்பவும் வந்திடுவார்
  5. தூய ஆவியாரை நம்புகிறேன்
    பாரினில் அவர் துணை வேண்டுகிறேன ;
    பாவ மன்னிப்பில் தூய்மை பெற்று
    பரிகார வாழ்வில் நிலைத்திடுவேன்.
  6. திரு அவை உரைப்பதை நம்புகிறேன்
    புனிதர்கள் உறவை நம்புகிறேன்
    உடலின் உயிர்ப்பை நிலைவாழ்வை
    உறுதியுடனே நம்புகிறேன் – ஆமென்
    Jeba
        Tamil Christians songs book
        Logo