Yesuvai Antri Veroru Ratchakar – இயேசுவை அன்றி வேறொரு ரட்சகர்

பல்லவி

யேசுவை அன்றி வேறொரு ரட்சகர்
காசினி தனிலுண்டோ, மனமே?-அவர்
நேசமறிந்து விசுவாசம் இல்லாமலே,
மோசம் போவதேன், மனமே?

சரணங்கள்

1. ஆதம் ஏவை செய்த பாதகம் தொலைந்திடப்
பூதலம் வந்ததார், மனமே?-கொடும்
யூதர்களால் பல வாதைகள் கொண்டு திவ்ய
போதகம் செய்ததார், மனமே? – யேசு

2. இந்த வாழ்வு கன நிந்தை என்றுனது
சிந்தை தெளிந்திருந்தும், மனமே-ஐயோ!
பந்த பாசமதில் நொந்து நாள் தோறும் அ
லைந்து திரிவதேன், மனமே? – ஏசு

3. பூதல மீதினில் ஓதரி[1] தாம் பரஞ்
சோதியைப் போற்றிசெய் மனமே;-செய்தால்
பாதகம் போய் மோட்ச சாதகம் ஆமென்று
வேதமுரைக்கு தல்லோ மனமே? – ஏசு

சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்.

Unto the pure all things are pure: but unto them that are defiled and unbelieving is nothing pure; but even their mind and conscience is defiled.

தீத்து : Titus:1:15

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks