Vedhamae Enna Solluvean – வேதமே என்ன சொல்லுவேன்

வேதமே என்ன சொல்லுவேன்?

பல்லவி

வேதமே, என்ன சொல்லுவேன்?-நின் மாட்சியை.

அனுபல்லவி

சேத மிலாது நன்னாதர் தம் அருள் திருப்
பாதமுறும் நெறி யோது மொரே சத்ய. – வேத

சரணங்கள்

1. கண்முன் நீ எழுந்தானால் கரையிலா ஞானம்;
காந்தி நற்பனி மழை கசிந்திடும் வானம்;
புண் மனமுடை யோர்க்குப் புகழருந் தானம்;
புசித்திடக் கசித்திட ருசித்திடும் பானம். – வேத

2. சிறியவர் பெரியவர் செல்வர்கள் வலியார்
தீரர்கள் வீரர்கள் சீரியர் எளியார்
அறிஞர்கள் அல்லவர் ஆடவர் மெலியார்
அனைவரும் அருந்திட அருந்திடச் சலியார். – வேத

3. கனபல மருளுவாய், தினந்தினங் காலை
களைப்பினைப் போக்குவாய், களைப்புறு மாலை
தினமென திதயமே திருத்தலுன் வேலை,
செப்பருங் கனிதருங் கற்பகச் சோலை. – வேத

4. அகமுறு மானைகள்[1] விழுந்து தள்ளாடும்;
அருள்நதி ஆடுகள் நடந்துனி லோடும்;
தகவுனின் கரைகளில் குருவிகள் கூடும்;
தருக்கள் செழித்திருக்கும் தாசர்கள் நாடும். – வேத

5. பொன் அபரஞ்சியிலும்[2] உன் விலை பெரிதே!
பூவுலகினிலுனக் குவமைக ளரிதே;
நின்னை யசட்டை செய்வோர் நிலைமிக வறிதே!
நின்படிப் பறியாதோர் கல்விமா சிறிதே! – வேத

6. இருபுறங் கருக்குவாள் தனிலும் நீ கூரே!
இகபரம் ரண்டிற்கும் உன்வழி நேரே!
கிருபை எத்தனமுனக் கேற்ற நற்பேரே!
கிறிஸ்துவின் அருள்தனை எனக்கு நீ வாரே![3] – வேத

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version