உங்க பிரசன்னத்தில் நான் நிற்கையிலே Unga Prasannathil Naan Nirgaiyile

உங்க பிரசன்னத்தில், நான் நிற்கையிலே
உம் மகிமை என்னை மூடுதே
உந்தன் அன்பை எண்ணி நான் துதிக்கையிலே
எந்தன் கண்கள் கலங்கிடுதே

என் ஆவி, ஆத்மா, சரீரம் உமக்குத்தானே
ஒரு தீங்கும் என்னை ஒன்றும் செய்திடாதே
என் கோட்டையும் நீரே, என் துருகமும் நீரே
என் பிரியமும் நீரே இயேசையா

1. செங்கடலும் இரண்டாய் பிரிந்திடும்
பாயும் யோர்தானும் பின்திரும்பிடும்
உந்தன் பிரசன்னத்தில், (பெரும்)
பர்வதமும் மெழுகாக உருகிடுதே
(என் ஆவி, ஆத்மா…)

2. கடும்புயல்போல கஷ்டம் வந்தாலும்
பெருங்காற்றினால் அடிபட்டாலும்
உந்தன் பிரசன்னத்தில், வரும் வார்த்தை ஒன்றே
என்னை தேற்றிடும், அது போதுமே
(என் ஆவி, ஆத்மா…)

3. பெலனில்லாத நேரத்திலும்
சுகமில்லாத சமயத்திலும்
உந்தன் பிரசன்னத்தில், எல்லா பெலவீனம்
இல்லாமல் மறைந்திடுதே
(என் ஆவி, ஆத்மா…)

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version