Thothira Pandikai Aasaripomae – தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே

தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே
தூயகம் ஊறிய பக்தியால் நாமே – தோத்திர

பாத்திரம் இதுவெனப் பகர்உடல் பொருளாவி
பரமனுக் கர்ப்பணஞ் செய் பரிவு நிறைய மேவித் – தோத்திர

பனித்துளி நிலத்தினைப் பண்படுத்தினதன்றே
பகருமுகில் கொழுமைப் படுத்திய தெண்ணிநன்றே – தோத்திர

கடவுளே பயிருக்குக் கனமழை பெய்வித்தாரே
காங்கையால் கதிர்வளம் கதிக்கவும் உய்வித்தாரே-தோத்திர

நெஞ்சத்தில் தெய்வஅன்பாம் நிதிநிகர் விதைபெய்து
நித்திய சமாதானம் நிறுவ விண் ணப்பம்செய்து-தோத்திர

இறைவன் இரத்தக் கையால் இரட்சண்யம் அருள்வித்தை
இதயத்தில் விதைத்ததற் கின்குணப் பலன்வைத்துத் – தோத்திர

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version