Kiristhava Illaramae siranthida – கிறிஸ்தவ இல்லறமே சிறந்திட

கிறிஸ்தவ இல்லறமே – சிறந்திடக்
கிருபை செய்வீர், பரனே!

அனுபல்லவி

பரிசுத்த மரியன்னை, பாலன் யேசு, யோசேப்புப்
பண்பாய் நடத்திவந்த இன்பக்குடும்பம்போல – கிறிஸ்தவ

ரணங்கள்

1.ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும்,
திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும்,
சுப ஞானக்கீர்த்தனை துத்தியம் பாடவும்,
சுத னேசு தலைமையில் தூய வீடாகவும் – கிறிஸ்தவ

2. ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல்,
உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம்போல,
நாளும் யேசு பிரானை நல்விருந்தாளி யாக்கி,
நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டுக் – கிறிஸ்தவ

3.அன்போடாத்தும தாகம் அரிய பரோபகாரம்,
அருமையாக நிறைந்த அயலார்க் கொளிவிளக்காய்த்,
துன்பஞ் செய்கிற பலதொத்து வியாதிகளைத்,
தூரந்துரத்தும் வகை சொல்லிச் சேவையைச் செய்து – கிறிஸ்தவ

4. மலையதின் மேலுள்ள மாளிகையைப் போலவே,
மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் நின்று,
கலைஉடை உணவிலும், கல்வி முயற்சியிலும்,
கர்த்தருக் கேற்ற பரிசுத்தக் குடும்பமாகக் – கிறிஸ்தவ

https://www.youtube.com/watch?v=pjfImPmqwtY

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version