Bro. W. JERRY RAGLAND

Athi Mangala Kaarananae அதிமங்கல காரணனே

பல்லவி     அதி-மங்கல காரணனே, துதி-தங்கிய பூரணனே, நரர்வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்தவண்மையே தாரணனே! சரணங்கள்   1. மதி-மங்கின எங்களுக்கும்,திதி-சிங்கினர் தங்களுக்கும்உனின் மாட்சியும் திவ்விய காட்சியும்தோன்றிடவையாய் துங்கவனே — அதி-மங்கல 2. முடி-மன்னர்கள் மேடையும்,மிகு-உன்னத வீடதையும் நீங்கிமாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ,வந்தனையோ தரையில்? — அதி-மங்கல 3. தீய-பேய்த்திரள் ஓடுதற்கும்,உம்பர்-வாய்திரள் பாடுதற்கும், உனைப்பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும்பெற்ற நற்கோலம் இதோ? — அதி-மங்கல

Athi Mangala Kaarananae அதிமங்கல காரணனே Read More »

Arasanai Kanamal Irupomo – அரசனைக் காணமலிருப்போமோ

அரசனைக் காணமலிருப்போமோ – Arasanai Kaanamaliruppomo அரசனைக் காணமலிருப்போமோ? – நமதுஆயுளை வீணாகக் கழிப்போமோ? பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர்பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத 1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல்ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! – யூத – அரசனை 2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! – மேற்குத்திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர்பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! – யூத

Arasanai Kanamal Irupomo – அரசனைக் காணமலிருப்போமோ Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks