Paarungal Thodarnthu Vaarungal – பாருங்கள் தொடரந்து வாருங்கள்

பல்லவி

பாருங்கள், தொடர்ந்து வாருங்கள், கொல்கதா
பாதையிற், கோதையரே.

அனுபல்லவி

ஆருங் காணவே ஆட்டுவாசல் கடந்து மலை
மேட்டில் நடந்தனந்தங் கோட்டிகள் படுகின்றார் – பாருங்கள்

சரணங்கள்

1. பொன்னாய் ஒளிரு மேனி மண்ணாய் மடியுதே,
புங்க உடலெல்லாம் புழுதிகள் படியுதே,
நன்னய மலர்க் கண்கள் கண்ணீர்கள் வடிக்குதே,
நாவும் அஸ்தியும் காய்ந்து சாவுமே பிடிக்குதே. – பாருங்கள்

2. பாவியைத் தேடி வந்த பாதங்கள் பொரியுதே,
பட்சத்தினால் விரித்த கைகளும் நெரியுதே,
நாபிக்கமலம் பற்றிக் கோபித்துக் கரியுதே,
நடையு முடையுந் தொய்ந்து சதைகளும் சரியுதே. – பாருங்கள்

3. திருமுக அருள் ஒன்றும் தெரியாதடைந்ததே,
செங்குரு திகளெல்லாம் பொங்கி வடிந்ததே,
சருவ வல்லபம் குன்றித்திறையும் நிறைந்ததே,
ஜகமும் பரமுந் துக்க சாகரத்தழுந்துதே. – பாருங்கள்

4. துன்ப துரிதத்திலும் அன்பையே பொழிகின்றார்,
துட்டர்கள் அதற்காகத் திட்டுகள் மொழிகின்றார்,
அன்பாய்ப் பிழைக்கத் தமதாவியைக் கெடுக்கின்றார்,
அந்தோ நசரேத்தையர் நொந்தடி எடுக்கின்றார் – பாருங்கள்

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version