kartharai thuthi saeyithu – கர்த்தரைத் துதி செய்து

kartharai thuthi saeyithu – கர்த்தரைத் துதி செய்து
கர்த்தரைத் துதி செய்து களிகூர்ந்திடுவேன்
அற்புதரை இன்று கண்டு ஆர்ப்பரித்திடுவேன்
1. இயேசுவின் பாதத்தில் பரவசம் காண்கின்றேன்
இன்னல்கள் மறந்து இனிமை பெற்றிட
காலமும் கடைசி ஆகிடுதே ……. இதோ
கர்த்தர் வரும் நாளும் நெருங்கிடுதே – கர்த்தரை
2. புதிய பாதையில் புதுமையைக் காண்கிறேன்
புதிய வருடத்தில் வல்லமை பெற்றிட
பூவைப் போல் மலரும் மகிமை நாட்களிலே
புனிதனைப் புகழ்ந்து நான் மகிழ்ந்திடுவேன் – கர்த்தரை
3. மாய உலகத்தில் வெறுமையைக் காண்கிறேன்
மாட்சிமை இயேசுவின் மகிமை பெற்றிட
சத்திய பாதையில் நின்று ஓடிடுவேன்
சந்தோஷம் பொங்கிட சந்திப்பேன் இயேசுவை – கர்த்தரை
4. இனிய இரட்சிப்பில் இயேசுவைக் காண்கிறேன்
இன்பம் பொங்கிடும் சேவை பெற்றிட
இரட்சகர் கரங்களில் தாங்கிடுவார்… நான்
இன்முகத்தோடே பறந்திடுவேன் – கர்த்தரை
5. சீயோனின் சிகரச் செழிப்பை காண்கிறேன்
சிருடன் வந்திடும் சிறப்பைப் பெற்றிட
வாஞ்சையில் பெருகிடும் வெகுமதி வந்திடும்
வற்றாத ஜீவ வாழ்வடைந்திடுவேன் – கர்த்தரை
6. ஆத்தும நேசரை ஆவியில் காண்கிறேன்
ஆவியின் மழையை நிறைவாய் பெற்றிட
லீலியும் மலர்ந்திடும் நேசரும் வந்திடுவார்
மகிமையில் மறுரூபம் தரித்திடுவேன் – கர்த்தரை

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version