Ivarae Perumaan – இவரே பெருமான்

பல்லவி

இவரே பெருமான் , மற்றப்
பேர் அலவே பூமான் – இவரே பெருமான்

சரணங்கள்

1. கவலைக் கிடங்கொடுத் தறியார் – வேறு
பவவினை யாதுமே தெரியார் – இப்
புவனமீது நமக்குரியார் – இவரே

2. குருடர்களுக் குதவும் விழியாம் – பவக்
கரும இருளை நீக்கும் ஒளியாம் – தெய்வம்
இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் – இவரே

3. பலபிணி தீர்க்கும் பரிகாரி – சொல்லும்
வலமையில் மிக்க விபகாரி – எக்
குலத்துக்கும் நல்ல உபகாரி – இவரே

4. அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் – கொடு
மறம்விடு பவர்க்கருள் முத்தன் – இங்கே
இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன் – இவரே

5. அலகை தனை ஜெயித்த வீரன் – பவ
உலகை ரட்சித்த எழிற்பேரன் – விண்
ணுலகு வாழ் தேவ குமாரன் – இவரே

6. பொன்னுலகத் தனில்வாழ் யோகன் – அருள்
துன்ன உலகில் நன்மைத் தேகன் – நம்பால்
தன்னை யளித்த ஓர் தியாகன் – இவரே

நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

Grace be unto you, and peace, from God our Father, and from the Lord Jesus Christ.

பிலிப்பியர் : Philippians:1:2

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version