En pearil Thayavaai irum – என்பேரில் தயவாய் இரும்

என்பேரில் தயவாய் இரும்

பல்லவி

சருவேசுரா ஏழைப்பாவி-என் பேரிலே
தயவாய் இரும் சுவாமி.

அனுபல்லவி

திரியேக பரதேவா நெறி மேவும் ஒரு யோவா
சித்தம் இரங்கிக் காத்துக் கிறிஸ்தின் முகத்தைப் பார்த்து.- சரு

சரணங்கள்

1.தந்தை நின் ஒன்றான மைந்தன் தனைக் கொடுத் தித்
தகைமை உலகை நேசித்தாய்-நின்
சொந்தக் கிருபை தனைச் சிந்தித்துணர மறை தொகுத்தெனக் குபதேசித்தாய்
இந்தப் பெரிய நேசம் புந்திக் கொளியதாக்கும்
எந்தப் படியும் என் நிர்ப்பந்தம் அனைத்தும் போக்கும்!-சரு

2. தேவரீர்க் கேற்காத தீவினைகளைச் செய்தும் தண்டியாமல்
பொறுத்தீர் -நீர்
யாவும் அறிந்திருந்தும் கோபித்துக் கைவிடாதென் நன்றி
கேட்டை மறுத்தீர்
ஜீவனே உமக்குப் பாவி பதில் என்செய்வேன்?
மேவி அடி தொழாமல் ஆவி எங்ஙனம் உய்வேன்?- சரு

3. நெஞ்சில் தெய்வ பயம் கொஞ்சம்மேனும் இல்லாமல் நீதி
வழியைக் கடந்தேன்-கெட்ட
வஞ்ச உலக வாழ்வை மிஞ்சத் தேடிப் பேயின் மனதுற்கேற்க நடந்தேன்
பஞ்ச பாவி கூவிக் கெஞ்சும் ஜெபத்தைக் கேளும்
தஞ்சம் என்றேன் உனக்கே அஞ்சல் என்றெனை ஆளும் சரு

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version