En Kanmalaiyum – என் கன்மலையும்

En Kanmalaiyum

என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே
என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும் – 2

  1. துணிகர பாவ கிரியை
    மேற்கொள்ள முடியாது – 2
    வசனம் தியானிப்பதால்
    வாழ்வேன் பரிசுத்தமாய் – 2

இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே – 2 – என் கன்மலையும்

  1. (உம்) வார்த்தையின் வல்லமையால்
    உயிர்ப்பிக்கப்படுகின்றேன் – 2
    (உம்) பாதையில் நடப்பதினால்
    ஞானம் பெறுகின்றேன் – 2
  1. இதயம் மகிழ்கின்றது
    (உம்) வசனம் உட்கொள்வதால் – 2
    கண்கள் மிளிர்கின்றன
    (உம்) வார்த்தையின் வெளிச்சத்தினால் – 2
  2. தங்கம் பொன்னைவிட
    அதிகமாய் விரும்புகிறேன் – 2
    தேனின் சுவையைவிட
    சுவைத்து மகிழ்கின்றேன் – 2

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version