அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalayil Ummai Theduvean lyrics

பல்லவி

அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே
தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெபத்தாலே

அனுபல்லவி

இதுகாறும் காத்த தந்தை நீரே;
இனிமேலும் காத்தருள் செய்வீரே,
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,
பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் தேவே! – அதி

சரணங்கள்

1. போன ராமுழுவதும் பாதுகாத்தருளின போதா! – எப்
போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா
ஈனப்பாவிக்கேது துணை லோகிலுண்டு பொற்பாதா?
எனக்கான ஈசனே! வான ராசனே!
இந்த நாளிலும் ஒரு பந்த மில்லாமல் காரும் நீதா! – அதி

2. பல சோதனைகளால் சூழ்ந்து நான் கலங்கிடும்போது – தப்
பாது நின் கிருபை தாங்கிடவேணும் அப்போது
விலகாது என் சமூகம் என்ற வாக்கில் தவறேது?
விசுவாசங் கொண்டு மெய்ப் பாசமூண்டிட
விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது? – அதி

3. நரர் யாவர்க்கு முற்ற நண்பனாய் நடந்திடவையே! – தீ
நாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே!
பரலோக ஆவியை நல் மாரிபோலெனிலே பெய்யே!
புகழான நாதனே! வேத போதனே!
பூரணமாய் உனைப் போற்றுவேன், தினம்தினம் மெய்யே – அதி

4.வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.

And God saw the light, that it was good: and God divided the light from the darkness.

ஆதியாகமம் | Genesis: 1

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version