பல்லவி
அனந்த ஞான சொரூபா, நமோ நம! அனந்த ஞான சொரூபா!
சரணங்கள்
1. கனங்கொள் மகிமையின் கர்த்தாவே, காத்திர நேத்திர பர்த்தாவே – நரர்
காண வந்தாரே – பரன் நரர் காண வந்தாரே
கருணாகர தேவா, அனந்த ஞான சொரூபா!
2. அந்தப் பரமானந்த குணாலா ஆதத்தின் தீ தற்ற மனுவேலா – எமை
ஆண்டு கொண்டாரே, பரன் எமை ஆண்டு கொண்டாரே,
ஞானாதிக்கத் துரையே அனந்த ஞான சொரூபா!
3. ஆடுகளுக் குரிமைக் கோனே, ஆரண காரணப் பெருமானே – நரர்க்
கன்பு கூர்ந்தாரே – பரன் நரர்க் கன்பு கூர்ந்தாரே,
கிருபாசனத் தானே, அனந்த ஞான சொரூபா!
4. பந்தத் துயரந் தீர்த்தாரே, பாவத்தைச் சாபத்தை ஏற்றாரே – எமைப்
பார்க்க வந்தாரே – பரன் எமைப் பார்க்க வந்தாரே,
பரமாதிக்கத் தோரே, அனந்த ஞான சொரூபா!
பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;
And God said, Behold, I have given you every herb bearing seed, which is upon the face of all the earth, and every tree, in the which is the fruit of a tree yielding seed; to you it shall be for meat.
ஆதியாகமம் | Genesis: 1: 29
- சின்னஞ்சிறு தீபம் – Chinnajsiru Deepam
- இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil
- நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar
- கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee
- மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam