Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar – அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார்

Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar – அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார்

பல்லவி

அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் அதிசயமே

அனுபல்லவி

பொல்லாப் பேய் நடுங்கிவிழப்
பொற்பரனின் சேயர் மகிழ. – அல்

சரணங்கள்
1. பாவம் பேயோடு மரணம்,
பாழன் பேயினது அரணம்,
சீவபரனால் திரணம்,
திடமாயடைவோம் அவர் சரணம். – அல்

2. வலுசிங்கம் சிறையாச்சு,
மாற்றானின் வல்லமை போச்சு,
அலகையுளதோ பேச்சு
அதுவிடலாமோ இனி முச்சு. – அல்

3. திருநாதர் பேயிருபேர்
செய்தார் கொடியதா மொருபோர்
அருணாதர் தாம் ஜெயம் நேர்
அடைந்தார் ஓ சபையே களிகூர். – அல்

தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.

And God blessed them, saying, Be fruitful, and multiply, and fill the waters in the seas, and let fowl multiply in the earth.

ஆதியாகமம் | Genesis: 1: 22

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version