Aarum Thunai Illayae – ஆரும் துணை இல்லையே

ஆரும் துணை இல்லையே

பல்லவி

ஆரும் துணை இல்லையே எனக்
காதியான் திருப்பாலா – உன்தன்
ஐந்து காயத்தின் அடைக்கலம் கொடுத்
தாளுவாய் யேசுநாதா.

அனுபல்லவி

சீர் உலாகு பூங்காவில் ஓர் கனி
தின்ற பாதகம் மாற்றவே
சிலுவை மீதினிலே உயிர்விடும்
தேவனே என் சுவாமி. – ஆரும்

சரணங்கள்

1.முந்து மானிடர் தந்த தீவினை முழுவதும் அறவேண்டியே
முள்முடியுடன் குருசில் ஏறிய முன்னவா கிருபை கூர்வையே
சிந்தும் உன் உதிரத்தில் என் வினை தீர்த்திரசியும்; ஐயனே
தீயபாவி எனக்கு வேறொரு செயலிடம் துணை இல்லையே! – ஆரும்

2.தந்தை தாயாரும் மைந்தர் மாதரும் சகலரும் உதவார்களே
சாகும்நாளாதில் நீ அலால் எனைத் தாங்குவார்களும் உண்டுமோ?
சொந்தம் நீ எனக்கன்றி வேறொரு சொந்தமானவர் இல்லையே
சுற்றமும் பொருள் அத்தமும் முழபத்தமே என் தெத்தனே!- ஆரும்

3.கள்ளனாயினும் வெள்ளனாயினும் பிள்ளை நான் உனக்கல்லவோ?
கர்த்தனே வலப்பக்கமேவிய கள்ளனுக் கருள் செய்தையே
தள்ளி என்னைவிடாமல் உன்னடி தந்து காத்தருள் அப்பனே
தயவாய் ஒரு குரசில் ஏறிய சருவ ஜீவ தயா பரா – ஆரும்

4.நன்றி அற்றவனாகிலும் எனைக் கொன்று போடுவதாகுமோ?
நட்டமே படும் கெட்ட மைந்தனின் கிட்ட ஓடினதில்லையோ?
கொன்றவர்க் கருள் செய்யும் என்று பிதாவை நோக்கிய கொற்றவா
குற்றம் ஏது செய்தாலும் நீ எனைப் பெற்றவா பொறுத் தாள்வையே – ஆரும்

5.பக்தியேதும் இலாது மாய சுகத்தை நாடுய பித்தனாய்ப்
பாழிலே என்றன் நாள் எலாங் கெடுத் தேழையாகினேன் என் செய்வேன்?
சத்ருவான பிசாசினால் வரும் தந்திரம் கொடிதல்லவோ?
தஞ்சம் அற்றவன் ஆகினேன் உன் தஞ்சல் கூறும் அனாதியே

https://www.youtube.com/watch?v=AW2H0o86onw

மகலாலெயேலுடைய நாளெல்லாம் எண்ணூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.

ஆதியாகமம் | Genesis: 5: 17

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version