ஆண்டவரின் நாமமதை ஈண்டு போற்றுவேன் – அவர்
ஆளுகையின் நீதி அன்பின் வாழி சாற்றுவேன் – ஆண்
உத்தம வழியில் நிதம் புத்தி கொள்ளுவேன் – மன
உண்மையுடன் வாழ்ந்து தீய கன்மம் தள்ளுவேன் – ஆண்
கெட்ட விஷயங்கள் எனை ஒட்டுவதில்லை மதி
கேடரின் புரளிகளும் கிட்டுவதில்லை – ஆண்
வஞ்சகங்களை உகக்கும் நெஞ்சை நீக்குவேன் – பொல்லா
மார்க்கங்களிலே நடக்கும் தீர்க்கம் போக்குவேன் – ஆண்
மற்றவனை யேசி வாயால் குற்றங்கள் செய்யும் – துஷ்ட
மாந்தர் மேலே பற்றாமலென் பாந்தவம் நையும் – ஆண்
பொய்யர்களை என்னுடன் உய்ய ஒட்டேனே – மகா
புரளிசெய்யும் எத்தர்களின் திரளில் கிட்டேனே – ஆண்
சீருடையோர் பேரில் அன்பு கூருவேனே – நல்ல
சீரொழுகு சான்றோர் தயை சேருவேனே – ஆண்
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.
And the LORD God said unto the woman, What is this that thou hast done? And the woman said, The serpent beguiled me, and I did eat.
ஆதியாகமம் | Genesis: 3: 13
- சின்னஞ்சிறு தீபம் – Chinnajsiru Deepam
- இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil
- நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar
- கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee
- மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam