Aagaathathu Ethuvmillai – ஆகாதது எதுவுமில்லை song lyrics

ஆகாதது எதுவுமில்லை உம்மால்
ஆகாதது எதுவுமில்லை
அகிலம் அனைத்தையும்
உண்டாக்கி ஆளுகின்றீர்

துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள்
வெட்டுண்டு மடியச் செய்தீர்
உம்மால் ஆகும், எல்லாம் ஆகும்

அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்று
நடந்தானே இயேசு நாமத்தில்
உம்மால் ஆகும், எல்லாம் ஆகும்

கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபு
பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய்
உம்மால் ஆகும், எல்லாம் ஆகும்

கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனை
கரம் பிடித்துத் தூக்கி விட்டீர்
உம்மால் ஆகும், எல்லாம் ஆகும்

ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்று
இரட்டையர்கள் பெற்றெடுத்தாளே
உம்மால் ஆகும், எல்லாம் ஆகும்

எலியாவின் வார்த்தையாலே சாறிபாத் விதவை வீட்டில்
எண்ணெய் மாவு குறையவில்லையே
உம்மால் ஆகும், எல்லாம் ஆகும்

https://www.youtube.com/watch?v=z2RFUiOX0UU

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version