Engeyaakinum Swami – எங்கேயாகினும் ஸ்வாமி

பல்லவி

எங்கேயாகினும்-ஸ்வாமி-எங்கேயாகினும்,
அங்கே யேசுவே,-உம்மை-அடியேன் பின்செல்லுவேன்.

சரணங்கள்

1. பங்கம், பாடுகள்-உள்ள-பள்ளத்தாக்கிலும்,
பயமில்லாமல் நான்-உந்தன்-பாதம் பின்செல்வேன். – எங்கே

2. வேகும் தீயிலும்-மிஞ்சும்-வெள்ளப் பெருக்கிலும்,
போகும்போதும் நான்-அங்கும் ஏகுவேன் பின்னே. – எங்கே

3. பாழ் வனத்திலும்-உந்தன்-பாதை சென்றாலும்,
பதைக்காமல் நான்-உந்தன்-பக்கம் பின்செல்வேன். – எங்கே

4. எனக்கு நேசமாய்-உள்ள-எல்லாவற்றையும்
எடுத்திட்டாலுமே-உம்மை-எங்கும் பின்செல்வேன். – எங்கே

5. உந்தன் பாதையில்-மோசம்-ஒன்றும் நேரிடா;
மந்தாரம் மப்பும்-உம்மால்-மாறிப்போகுமே. – எங்கே

6. தேவையானதை-எல்லாம்-திருப்தியாய்த் தந்து,
சாவு நாள் வரை-என்னைத்-தாங்கி நேசிப்பீர். – எங்கே

7. ஜீவித்தாலும் நான்-எப்போ-செத்தாலும் ஐயா!
ஆவலாகவே-உம்மை-அடியேன் பின்செல்லுவேன். – எங்கே

https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/653093711559510

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks