மான்கள் நீரோடை வாஞ்சித்து – Maangal Neerodai vaanjithu

மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும் போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்து கதறுதே
தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்

1. தேவன் மேல் ஆத்துமாவே
தாகமாயிருக்கிறதே
தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே – மான்

2. ஆத்துமா கலங்குவதேன்
நேசரை நினைத்திடுவாய்
அன்பரின் இரட்சிப்பினால் தினமும்
துதித்து போற்றிடுவோம் – மான்

3. யோர்தான் தேசத்திலும்
எர்மோன் மலைகளிலும்
சிறுமலைகளிலிருந்தும் உம்மை
தினமும் நினைக்கின்றேன் – மான்

4. தேவரீர் பகற் காலத்தில்
கிருபையைத் தருகின்றீர்
இரவில் பாடும் பாட்டு என்தன்
வாயிலிருக்கிறதே – மான்

5. கன் மலையாம் தேவன்
நீர் என்னை ஏன் மறந்தீர்
எதிரிகளால் ஏங்கி அடியேன்
துக்கத்தால் திரிவதேனோ? – மான்

மான்கள் நீரோடை வாஞ்சித்து – Maangal Neerodai vaanjithu

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version