நீ என் தாசன் நான் உன்னை- Nee En Dhasan Naan Unnai

நீ என் தாசன் நான் உன்னைத்
தெரிந்து கொண்டேன்
நீ போகும் இடமெல்லாம்
உன்னோடு வருவேன்
கலங்காதே திகையாதே

தண்ணீரைக் கடந்திடும் போதும்
அக்கினியில் நடந்திடும் போதும்
மூழ்காமல் வீழ்காமல் இருந்திட நீயும்
விலகாமல் என்றும் நடத்துவேன் நானும்

தாகத்தால் நா வறண்ட போதும்
தாக்குதலால் கால் தளர்ந்த போதும்
கன்மலையின் தண்ணீரைப் பருகிட நீயும்
கைப்பிடித்து உன்னை
நடத்துவேன் நானும்

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version