கர்த்தர் தந்த நாளில் – Karthar Thantha naalil

கர்த்தர் தந்த நாளில்
களிகூருவேன்
என்னைக் காத்த தேவன்
புகழ் பாடுவேன்

நான் ஆடிடுவேன்
துதி பாடிடுவேன் (2)
என் இயேசுவின் புகழ் பாடுவேன்
என் நேசரின் புகழ் பாடுவேன்
-கர்த்தர் தந்த நாளில்

ஜீவனைத் தந்தாரே துதி பாடுவேன்
புது ஜீவியம் தந்தாரே துதி பாடுவேன் (2)
அவர் அன்பில் உயிர் வாழகிறேன்
அவர் கிருபையால் நிலைநிற்கின்றேன் (2)
-கர்த்தர் தந்த நாளில்

சுக வாழ்வைத் தந்தாரே புகழ் பாடுவேன்
என் சுமை ஏற்றுக்கொண்டாரே புகழ் பாடுவேன் (2)
அவராலே உயிர் வாழ்கின்றேன்
நான் அவரோடு உயிர் வாழ்கின்றேன் (2)
-கர்த்தர் தந்த நாளில்

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version