லஞ்சம் வாங்கி சம்பாதிக்க – Lancham Vaangi sambathikka


லஞ்சம் வாங்கி சம்பாதிக்க வேண்டாம்
அப்படி சேர்த்து வைப்பது நிலைநிற்பதில்லையே
பயந்து பயந்து பயந்து பயந்து வாழ வேண்டுமா
பயந்த வாழ்க்கை முடிந்த பின்பு நரகம் வேண்டுமா

ஒன்றும் கொண்டு வந்ததில்லை
ஒன்றும் கொண்டு போவதில்லை
இறக்கும்போதிலே உண்ண உணவும்
உடுக்க உடையும் போதுமல்லவா
அளவுக்கதிகம் சேர்த்து வைப்பது
ஆபத்தல்லவா நிம்மதியாய் வாழ்வதற்கு
இடைஞ்சல் அல்லவா

பணத்தை சேர்த்து பெருகினாலும் திருப்தியில்லையே
பணத்தின் மீது தூங்கினாலும் தூக்கமில்லையே
தலைமுறைக்கு சாபத்தை நீ சேர்த்து வைக்கிறாய்
களங்கமில்லா பிஞ்சு நெஞ்சுக்கு நஞ்சை கொடுக்கிறாய்
உன் பேராசையால் பிள்ளைகளின் வாழ்வை கெடுக்கிறாய்

ரகசியமாய் லஞ்சம் வாங்கி சேர்த்து வைக்கிறாய்
அநியாயமாய் சேர்த்துவிட்டு துன்பப்படுகிறாய்
படைத்த கடவுள் கண்களை நீ அடைக்க முடியுமா
குறுக்கு வழியில் அபிரித்ததை மறைக்க முடியுமா
மோட்ச பாக்கியம் கிடைக்கும் என்று நம்ப முடியுமா

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version