இதயமே நீ பாடு – Idhayame Nee paadu

இதயமே நீ பாடு – Idhayame Nee paadu

இதயமே நீ பாடு
சுகம் கொடுத்தாரே பெலனளித்தாரே
நம் தேவன் செய்த நன்மைக்காக

எல்லா தீங்குக்கும் விலக்கி என்னை
கண்ணின் மணிபோல் காத்தாரே
தூங்காமல் உறங்காமல் எந்நேரமும்
அருகில் இருந்து காத்தாரே
காக்கும் தெய்வம் இயேசு
காண்கின்ற தேவன் இயேசு

தாங்க முடியா பெலவீனத்தில்
வேதனை படுக்கை வியாதியினில்
நோய்களையெல்லாம் சுமந்தாரே
அற்புத விடுதலை தந்தாரே
தாங்கும் தெய்வம் இயேசு
சுகம் கொடுத்த தேவன் இயேசு

ஆயிரமாயிரம் ஆலோசனை
நெருக்கத்தின் நேரம் கொடுத்தாரே
ஒவ்வொரு நாளும் நான் நடக்கும்
பாதையும் அவரே காட்டினாரே
நல்ல மேய்ப்பர் இயேசு
வழிநடத்தும் தேவன் இயேசு

ஜீவன் சுகம் எனக்குத் தந்து
அனுதினமும் புது கிருபை தந்து
என் ஆயுள் நாட்களை அன்றாடமும்
கூட்டி கொடுத்து காத்தாரே
அவரைப் புகழ்ந்து பாடு
செய்த செயலை நினைத்துப் பாரு

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version