Naanum Angea Serandiduvean song lyrics – நானும் அங்கே சேர்ந்திடுவேன்
Naanum Angea Serandiduvean song lyrics – நானும் அங்கே சேர்ந்திடுவேன்
1.பாடும் ஊழியன் நான்
இந்த பூவுலகில்
துதிப்பாடல்கள் பாடுகின்றேன்
மீட்கப்பட்டோர்களும்
துதி பாடும் அந்த
பரலோகத்தை வாஞ்சிக்கின்றேன்
நானும் அங்கே சேர்ந்திடுவேன்
துதி பாடுவோர் கூட்டத்துடன்
பரலோகம் போல் வீடு இல்லை
ஆனந்தமாய் பாடிடுவேன்
- பல மனநிலையில்
நாம் பாடல் பாடி
தேவபெலனை எதிர்நோக்குகின்றோம்
நிகரே இல்லாத
தூய மகிமையுள்ள
பரலோகத்தை வாஞ்சிக்கின்றேன்
3)பாவத்தை மேற்கொண்டு,
தூய கூட்டத்துடன்
ஆரவாரித்து பாடிடுவேன்
நித்திய பேரின்பத்தில்
இளைப்பாறிடுவேன்
பரலோகத்தில் வாழ்ந்திருப்பேன்
Translated from the Hymn When all Of God’s Singers Get Home